Monday, July 9, 2018

அசுரவதம்!!


Share/Bookmark

ஒரு திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை எந்த ஒரு தேவையற்ற இடைச்சொருகல்களும் இல்லாமல், எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குறையாமல், ரசிகரகளை ஒரு வித பதட்ட நிலையிலேயே வைத்திருப்பது மிகவும் கடினம். தமிழில் யாவரும் நலம், டிமாண்டி காலனி , மாயா என ஒரு சில படங்களை இந்த வகையில் சேர்க்கலாம். அப்படிப்பட்ட ஒரு திரைக்கதை அமைப்போடு வந்திருப்பதுதான் சசிகுமாரின் நடிப்பில் மருதுபாண்டியன் இயக்கிய அசுரவதம்.

வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஆனால் பெரிய சிக்கலான கதையமைப்பு இல்லை. நிறைய கதாப்பாத்திரங்கள் இல்லை. நான்கைந்து பணக்கார வில்லன்கள் இல்லை. ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டே இரண்டு பாடல்களுக்கு இடைப்பட்ட இடைவெளியில் வில்லன்களை சொல்லி வைத்துக் கொல்லும் மாஸ் ஹீரோ இல்லை. ஒரு சிறிய மளிகைக் கடை வைத்திருப்பவர்தான் கதையின் வில்லன். அவரை கொல்லத் துரத்தும் ஒரு சாதாரண மனிதர் தான் ஹீரோ.

எந்த இடத்திலும் திரைக்கதை தொய்வடையாமல் விறுவிறுப்பாகச் செல்கிறது. பெரும்பாலும் ஒரு திரைப்படம் பார்க்கும்பொழுது பார்வையாளர்கள் கதாநாயகனின் கோணத்திலிருந்தே படத்தை நோக்குவார்கள். அதாவது நாயகன் மகிழ்ச்சியாக இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருப்போம். கதையில் நாயகனுக்கு ஒரு சோகம் என்றால் நமக்கும் மனதுக்கு எதோ போல் இருக்கும். ஆனால் இந்த அசுரவதத்தில் ரசிகர்களை முழுவதும் வில்லனின் கோணத்திலிருந்து பார்க்க வைத்திருக்கிறார்கள். ”எப்போ எவன் எங்க குத்துவானோ… எப்போ எது கடிக்குமோ” என வில்லனுக்கு இருக்கும் அதே பதற்றம் பார்வையாளர்களாகிய நமக்கும் இருக்கிறது.

எப்பொழுது படம் விறுவிறுப்பாகச் செல்லும் என நாம் சில படங்களில் நினைப்பதுண்டு.. ஆனால் “யப்பா விறுவிறுப்பு போதும்… கொஞ்சம் நார்மலா ரெண்டு சீனு வைங்கப்பா.. ஒரு மனுசன் எவ்வளவு நேரந்தான் பதட்டமாவே உக்காந்துருக்கது” என நினைக்கும் அளவுக்கு ஆரம்பக்காட்சி முதல் இடைவேளை வரை இடைவிடாத விறுவிறுப்பு..

ஒரு சிம்பிளான கதையை இவ்வளவு சுவாரஸ்யமாகப் படம் பிடித்த்தற்காகவே இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இரண்டு விஷயங்கள் கேமராவும், லைட்டிங்கும். முதல்பாதியில் பெரும்பாலான காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டிருக்கின்றன. காட்சிப்பதிவும், ஒவ்வொரு காட்சிக்கான லைட்டிங்கும் அருமை.

சசிகுமாருக்கு கருத்து சொல்லவது போல பக்கம் பக்கமான வசங்கள் எதுவும் இல்லை. அவர் திரையில் தோன்றி ஒரு15 நிமிடம் கழித்துத்தான் முதல் வசனமே பேசுகிறார். பழிவாங்கத்துடிக்கும் அந்தக் குரூரத்தை முகத்தில் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார்.

சசிகுமாரின் முந்தைய படங்களினால் ஏற்பட்ட தாக்கத்தில் இந்த அசுரவதம் மக்களிடத்தில் எந்த வித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.  முதல் இரண்டு நாட்களில் கூட மிகப்பெரிய வரவேற்பு இல்லை. சமூக வலைத்தளங்களில் கூட படத்தைப் பற்றிய விமர்சன்ங்கள் பெரிதாக எதுவும் தென்பட வில்லை.

படம் வெளியான நான்காம் நாள் சென்னையிலுள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சியில் இந்தப் படத்தைப் பார்த்தேன். தியேட்டரின் மொத்த இருக்கைகள் 420. படம் பார்த்தவர்கள் வெறும் 15. பரிதாபமாக இருந்தது. கிராமப்புறங்களிலெல்லாம் இன்னும் மோசம். Piracy கிட்டத்தட்ட தமிழ்சினிமாவை முக்கால்வாசி கொன்று விட்டது. மீதமிருக்கும் உயிரையாவது காப்பாற்றிகொள்வது உசிதம்.  

இன்னும் இரண்டு வாரம் கழித்து அமேசன் ப்ரைமில் படம் வந்த பிறகு ஒவ்வொருவராக வந்து “ஏம்பா இந்தப் படம் நல்லாதானே இருக்கு… ஏன் ஓடல?” என்று நிச்சயம் ஆரம்பிப்பார்கள்.  தியேட்டருக்கு போய் படம் பார்த்தால் தான் படம் ஓடும்.. அமேசன் ப்ரைமுக்காகவோ டோரண்டுக்காகவோ காத்திருந்தால் எப்படி படம் ஓடும்?

நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகுமார் நடித்த  நல்ல திரைப்படம். நிச்சயம் பார்க்கலாம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

Unknown said...

Sorry bro. Good story. Very bad movie. No interting & very bore. Some audience move after interval.

Siva said...

Okay type movie. But more patience needed to see

ஜீவி said...

முத்து சிவா சார்.. உங்களுக்கு என்ன ஆச்சு? அசுரவதம் பார்ப்பவர்களை வதம் செய்வது மாதிரிதான் இருக்கு. நீங்கள் இதை cult classic movie range க்கு தூக்கி வைக்கிறீர்களே.. சசிகுமார் திரை வாழ்வை இந்த படம் வதம் பண்ணி விட்டதே..

Anonymous said...

It's truly very compⅼicated in this full of activity life to ⅼisten news οn TV, thus I
simply use web for that reason, and get the most up-to-Ԁate information.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...