Wednesday, October 20, 2010

ஜாக்கி அண்ணன் கலாய்க்கப்பட்டதற்கு என் கண்டனம்


Share/Bookmark


நான் எப்போதும் காலைல ஆபீஸ் போனோன மொதல்ல எங்க ஜாக்கி அண்ணன் blog
ah தான் படிப்பேன். அப்படிப்பட்ட எனக்கு இன்னிக்கு காலைல ஒரு phone வந்துச்சி... "மச்சி
ஜாக்கி அண்ணன கலாய்ச்சிட்டாண்டா ஒருத்தன்... அவன் எதாது பண்ணனும்டா நாம"
என்று சொல்லு அந்து வலைப்பதிவு முகவரியயும் தந்தான்.

அதில் சென்று பார்க்கும் போதுதான் தெரிந்தது "வானம் என்ற போதி மரம்" என்னும் பெயரில் இளவரசன் என்பவர் "ஆபாச ஜாக்கியும் அதிசய டிஸ்கியும்" எனும் தலைப்பில் எங்கள் ஜாக்கி அண்ணனை பற்றி அவதூராக எழுதியிருப்பது. அவருக்கு பதிலடி கொடுக்கவே இந்த பதிப்பு. நீங்கள் கேட்கலாம் "உனக்கு ஏன் இந்த அக்கரை?
யாருக்கும் இல்லாத அக்கரை...?" என்று. நானே படிப்பேன். தினமும் படிப்பேன் எங்கள் ஜாக்கி அண்ணனின் வலைப்பதிவை.

ஆம் மிஸ்டர் இளவரசன். ஜாக்கி அண்ணன் அவருடைய வலைப்பதிவில் ஆபாச படங்களை சேர்த்தார். மக்களை கெடுக்க வேண்டும் என்பதற்காகவா? இல்லை. ஆபாச படங்களின் வலைமுகவரி தேடி நேரத்தை வீணடிக்கும் மனிதர்களின் கஷ்டங்களை போக்குவதற்காக.

தினமும் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் இல் ஒவ்வொரு கதா நாயகிகளின் படங்களை மாற்றினார். அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை. அனுஷ்காவின் படம் பிடிக்காமல் போனவர்கள் அசின் படம் போட்டால் திரும்பி விரும்பி படிக்க வருவார்கள் என்பதற்காக.

தினமும் நான்கு மணிநேரம் வலைப்பதிவில் செலவிடுகிறார். அதனால் அவர் வெட்டியாக இருக்கிறார் என்று அர்த்தமா? சத்தியமாக இல்லை. தினசரி அவருக்கு வரும் கடிதங்களில் எந்த கடிதம் அவரை திட்டாமல் வந்திருக்கிறது என்பதை தேடி எடுக்கவே அதில் மூணே முக்கால் மணி நேரம் வீணாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? முரசொலியில் கலைஞர் கடிதம் இல்லாத பதிவை உங்களால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் எங்கள் ஜாக்கி அண்ணனின் வலைபதிவில் வாசகர் கடிதம் இல்லாத ஒரு பதிவை உங்களால் கண்டுபிடிக்க
முடியுமா?

நல்ல திரைப்படங்களுக்கு கூட நாராசமான பாணியில் விமர்சனம் எழுதினார்.
வேண்டுமென்றே செய்தாரா அதை? நிச்சயமாக இல்லை. ஏனென்றால் அவருக்கு அவ்வாறு தான் எழுத வரும். இதை அவரே அவரது பதிவுகளில் வெளியிட்டுரிக்கிறார். பத்தாம் வகுப்பில் 277/500 எடுத்த மாணவனின் வலைப்பதிவை இன்று தினசரி ஆயிரக்கணக்கனோர் படிக்கிறார்கள் என்ற அடிப்படை விபரமாவது உங்களுக்கு தெரியுமா? என்னவோ நீங்கள்
சொல்வதை பார்த்தால் அவர் பள்ளி பருவத்தில் "பருவம் 16" 'மாம்பழ ஆண்டி" போன்ற கதைகளை எழுதியதால் தான் அந்த மதிப்பண்கள் பெற்றார் என்பதை போல் இருக்கிறது.

உலக சினிமாவயே மூன்று பிரிவுகளில் வகைபடுத்த நினைப்பவர் எங்கள் அண்ணன் ஜாக்கி. அந்த மூன்று பிரிவுகள் என்னவென்றாவது உங்களுக்கு தெரியுமா? இப்போது தெரிந்த்து கொள்ளுங்கள். " பிட்டு படம்" "ஆபாச படம்" "A படம்" என்பதே அவை. அதற்காக அண்ணன் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமா? உலகின் அனைத்து மொழிகளில் ரிலீஸ் ஆகும்

அனைத்து படங்களையும் தினசரி பார்த்து நமக்கு விமர்சனங்களை சூடாக தருகிறார். அப்படி படம் பார்க்க நேரம் இல்லாவிடில் எதாவது பழைய ஆங்கில படங்களின் பெயரை மட்டும் படித்து விட்டு, அதற்கு அவராக ஒரு கதையை கற்பனை செய்துகொண்டு அதற்கு அவரே விமர்சனமும் எழுதுவாரே.. அந்த சேவைமனப்பங்கையா கேலி செய்கிறீர்கள்.

அப்புறம் "me the first" ன்னு comment போடுவபர்களை கடுமையாக சாடிய்ருக்கிறீர்கள். "என்னுடைய வலைத்தளத்துக்கு வந்தா comment போடாம போகக்கூடாது" என்று எங்கள் அண்ணன் விடுத்த அன்பு கட்டளையை மீறாமல், அவர் பதிவை type பண்ணிகிட்டு இருக்கும் போதே "me the first" ன்னு comment போடுறவுங்களோட சின்சியாரிட்டிய நீங்க கிண்டல் பண்ணீருக்கீங்க.

ஜாக்கி அண்ணனை அதிரடியா பேட்டி எடுத்த கழுகை நக்கலடிச்சிருக்கீங்க. இப்படி ஒரு வலைப்பதிவை வைத்துக்கொண்டு bebnoir blog க்கே சவால் விட்ட எங்கள் அண்ணன் ஜாக்கியை தவிர பேட்டி எடுக்க உகந்தவர் யாரேனும் உண்டா? "ஆன்மீகத்த பத்துன உங்கள் கருத்து என்ன?" என்ற கேள்வியின் உள்ளர்த்தம் உங்களைப்போன்ற மூடர்களுக்கு புரியாது தான், இப்போது தருகிறேன் விளக்கம் அதற்கு. நித்தியானந்தா, பிரேமானந்தா வரிசையில் ஜாக்கி எப்போது ஜாக்கியானந்தாவாக உருவெடுக்க போகிறார் என்பதே அதன் அர்த்தம். அந்த
நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அண்ணன் ஜாக்கி தனது பதிவுகள் மூலம் உலகுக்கு அடிக்கடி உணர்த்துவதை புரிந்து கொள்ள உங்களுக்கு அறிவு பத்தாது.

எதனால் எங்கள் அண்ணன் ஜாக்கி ஆனார் என்பது உங்களுக்கு தெரியும். ஜாக்கி ச்சான் மீது கொண்ட அளவுகடந்த பிரியத்தால். ஆனால நாங்கள் அவரை அந்த ஜாக்கியாக பார்க்கவில்லை. லாரியின் டயரை கழட்டும்போது அடியில் வைப்பார்களே ஒரு ஜாக்கி, அதுவாகத்தான் எங்களுக்கு அவர் தெரிகிறார். ஏனென்றால் பதிவுலகை தூக்கி நிறுத்திக்கொண்டிருப்பவரே எங்கள் எங்கள் ஜாக்கி தான்.

இறுதியாக ஒன்றே ஒன்று இளவரசன். எங்கள் ஜாக்கி அண்ணனை அவதூராக பேசியதற்காக உங்கள் மீது இ.பி.கோ....... ,,,,,,,,,,,,, ...... தத ப த,,,,,,,, எங்க ஜாக்கி அண்ணனுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை. எதாவது ஒரு பிரிவில் உங்கள் மேல் வழக்கு தொடருவார். We Will Meet In The Court.....

ஜாக்கி அண்ணேன்.. நீங்க எதுக்கும் கவல படாம ரெகுலரா போயிகிட்டு இருங்க... இவன் கெடக்குறான் சின்னப்பய........

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

18 comments:

கழுகு said...

சிவா சான்சே இல்ல, இது தான் best of the best post of your blog till date..

சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு

கழுகு said...

சிவா சான்சே இல்ல, இது தான் best of the best post of your blog till date..

சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு

கழுகு said...

Hats off siva.

Anonymous said...

gr8....:-)))))))))

எண்ணங்கள் 13189034291840215795 said...

கலக்கிட்டீங்க..

என் மன சுமை இப்பதான் இறங்கியது..

நான் லோக்கல் னு அந்த ஆளை சாட் ல சொன்னதை வைத்து பதிவு போட்டு ரொம்பத்தான் ஆடினார்..

இவரை தட்டிகேட்க யாருமில்லையொன்னு நினைத்தேன்..


நன்றிங்க..

சண்டைக்காரி said...

நெஞ்சு ஆரிச்சா

ஏண்டி இன்னுமா நீ திருந்தல தூ

Azar said...

Come on Jockey anna... come on.. Ithuku melayuma nenga porumaiya iruka porenga??!!!

முத்துசிவா said...

@சண்டைக்காரி:
yakka? yaara thittureenga ennaya? enga jakie annanaya?

முத்துசிவா said...

@Azar:

common common nu kooppuda enga jakie annan enna kuthuraya?

எண்ணங்கள் 13189034291840215795 said...

http://punnagaithesam.blogspot.com/2010/10/blog-post_21.html




ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))

குசும்பன் said...

//ஒரு ஜாக்கி, அதுவாகத்தான் எங்களுக்கு அவர் தெரிகிறார். ஏனென்றால் பதிவுலகை தூக்கி நிறுத்திக்கொண்டிருப்பவரே எங்கள் எங்கள் ஜாக்கி தான்.
//

இதுக்கு அந்த இளவரசனே தேவலாம்...முடியல.

ரிஷபன்Meena said...

யாரையோ கலாய்ச்சிருக்கீங்க , நல்லா ரசிச்சு சிரிக்கிற மாதிரி இருந்தது.


“Word Verification” இந்தக் கருமத்தை எடுத்து தொலைக்கக் கூடாதா??

முத்துசிவா said...

@ரிஷபன்Meena :

எங்க அண்ணன் ஜாக்கி அவரு... சுவாமி நித்தியானத்தாவோட சீடர்

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஒருவர் கேள்வி கேட்டிருக்கார் . பதில் சொல்லிடுங்க உங்க பாணியிலேயே..:))

-------------------------------------

ராம்ஜி_யாஹூ has left a new comment on your post "ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))":

இந்த பதிவிற்கு தொடர்பு இல்லாத செய்தி இது, பழைய பதிவிற்கு தொடர்பு உடைய செய்தி.
நீங்கள் எளிமையாக மேம்போக்காக சொல்லி விட்டு போய் விட்டர்கள். என் மனதை அது இன்னமும் தொந்தரவு செய்து கொண்டு தான் இருக்கிறது.

காம ஜோக்குகள் படிப்பதற்கே சிலர் சில பதிவர்களை தேடி வருகிறார்கள் என்று. நீங்கள் சொல்வது என் அனுபவத்தில் மிக உண்மை.
நான் ராஜநாயகம் (kernel thoughts)என்ற ஒரு பதிவரின் காம ஜோக்குகளுக்கவே அவர் பதிவை தேடி படிப்பேன், ஏனென்றால், அவர் எழுதும் ஜோக்குகள் கூகுளே இல் தேடினால் கிடைக்காது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

http://jackiesekar.blogspot.com/2010/10/18.html

ஜாக்கிண்ணா ரொம்ப வருந்திட்டார் போல..

முத்துசிவா said...

@பயணமும் எண்ணங்களும் :

//ஜாக்கிண்ணா ரொம்ப வருந்திட்டார் போல..//

ஆனா திருந்திட்டார்ங்குற மாதிறி தெரியல... இருந்தாலும் எங்கள கொஞ்சம் டீசன்ட்டா தான் திட்டிருக்காருன்னு நெனக்கிறேன்..ஹி ஹி

Azar said...

//common common nu kooppuda enga jakie annan enna kuthuraya?//
Ippo ethuku ne theva illama kuthuraiya thitra???

Muthu Pandi said...

Idai Padinga Mudalla

http://mokkaiblog.blogspot.com/

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...