Monday, November 22, 2010

நகரம்-அசத்தலான மறுபக்கம்


Share/Bookmark
வியக்கவைக்கும் திருப்பங்கள் அதிகம் இல்லை. அனல் பறக்கும் சண்டை காட்சிகள் அதிகம் இல்லை. படம் பாக்குறவங்கள சீட்டோட நுனியில உக்கார  வைக்கிற மாதிரி எந்த காட்சிகளும் இல்லை. ( இப்ப வர்ற படத்துக்கெல்லாம் படம் எப்படா விடுவாய்ங்க, எப்படா எழுந்து ஓடலாம்ங்குறதுக்காக தான் ரசிகர்கள் சீட்டோட நுனியில் உக்கார்ந்து இருக்காங்கங்குறது வேற விஷயம்)

வேற என்ன தான் இருக்கு இந்த படத்துல?

தியேட்டர குலுங்க வைக்கிற வடிவேலுவின் காமெடி காட்சிகளே அவை. வடிவேலுவை சரியாக உபயோக படுத்தினா படத்தை நகர்த்த வேறு எதுவும் தேவை இல்லை என்பதை ஏற்கனவே நிரூபித்த சுந்தர்.C, இந்த படத்திலும் அதே யுக்தியை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். படத்தை தனி ஆளாக தூக்கி நிறுத்துறாறு வடிவேலு. ஸ்டைல் பாண்டியாக வரும் வடிவேலுவின் காட்சிகளுக்கு தியேட்டரே குலுங்குகிறது. குறிப்பாக வடிவேலுவின் நூறாவது திருட்டுக்கு சக நண்பர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி, போலீஸில் மாட்டிக் கொள்வது கலக்கல்.

கேட் செல்வமாக சுந்தர்.C. முன்னால் ரவுடி திருந்த முயற்சித்து, சந்தர்பங்களால் திரும்பவும் பழைய பாதைக்கே தள்ளப்படுகிறார். யதார்த்தமான நடிப்பு. ஏற்கனவே பார்த்து பழகிய காட்சிகளானாலும் சற்று மெருகேற்றி புதிய பானியில். எந்த காட்சியும் முகத்தை சுழிக்க வைக்கும் அருவை ரகம் இல்லை. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரே வேகத்தில் சென்று முடிவடைகிறது.

மதுரை சம்பவத்திற்கு பிறகு, அனுயாவ ஹீரோயினா பாக்க கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. தமன் இசையில் என் பேரு க்ரிஷ்ணவேணி, புடிச்சா புளியங்கொம்பு பாடல்கள் OK. மத்தபடி பிண்ணனி இசை சொல்லிக்கொள்வது
போல் இல்லை.

நகரம்  - வின்னர், கிரி, தலைநகரம் வரிசையில் மற்றொரு ஆக்க்ஷன்+காமெடி கலக்கல்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

Ramesh said...

நல்ல விமர்சனம் நண்பரே..

முத்துசிவா said...

நன்றி

Anonymous said...

Good review. Keep it up. Why dont you write on the topic "living together"?


surya

முத்துசிவா said...

@surya:

நன்றிண்ணே...

"living together" பத்தியா? எனக்கு அதெல்லாம் எழுத வராதுண்ணே....

இருக்குறவியிங்க வச்சிக்கிறாய்ங்க... இல்லாதவியிங்க வரைஞ்சிக்கிறாய்ங்க.. நமக்கு ஏண்ணே வம்பு....

Unknown said...

dei write about "MANTHIRA PUNNAGAI".. Ennathan Beautiful mind, kudaikul mazhai nu ellathayum copy adichirunthalum padathula dialogue lam naachunu irunthuthu..

ம.தி.சுதா said...

தங்கள் பார்வையும் ரொம்ப வித்தியாசமாகத் தான் இருக்கிறது...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...