Wednesday, May 25, 2011

நண்பேன்டா விருதுகள்- Part II (ACCET)


Share/Bookmark
 இந்த பதிவின் முதல் பகுதியை படிக்கி இங்கே க்ளிக்கவும்



 5. இந்த ஐஞ்சாவது இடத்த புடிச்சிருக்கவரு ரொம்ப நாள் எங்க கூட பழகலன்னாலும் ரொம்ப குறுகிய காலத்துல, தோணி மாதிரி எங்க மனசுல இடம் புடிச்சிட்டாரு. அதுக்கு முக்கியமான காரணம் அவரோட பேருதான். என்ன பேருன்னு கேக்குறீங்களா?அருமையான பேரு.. சித்தார்த்.இவரு எங்களுக்கு final year ல தான் க்ளாஸ் எடுக்க வந்தாரு. அதுக்கு முன்னாடி வரைக்கும் எங்களுக்கு சித்தார்த்ன்னா நடிகர் சித்தார்த் மட்டும் தான் தெரியும். சித்தார்த்னு ஒரு proffessor வர போறாருன்னு சொன்னோன நாங்க சின்ன பையனா ஒருத்தர் வருவாரு போலன்னு

ரொம்ப ஆவ்லா இருந்தோம். கடைசியா ஒரு நாள் அவரும் வந்தாரு, அவர பாத்தோனா... "அடடடடா... அய்யயய்யயா... இய்ய்ய்ய்ய்ய்ய்"ன்னு தலைய பிச்சிகிட்டு கவுண்டர் ரியாக்ஷன் தான் விட முடிஞ்சிச்சு. ஒட்டல்ல வடை சுடுற சட்டி மாதிரி ஒரு மூஞ்ச வச்சிகிட்டு ஒருத்தரு வந்தாரு பாருங்க..அன்னிக்கு இருந்து ஆக்டர் சித்தார்த்த பாத்தாலும் எங்களுக்கு புடிக்காம போச்சி. அதுவும் அவரு இங்கிலீஸ் பேசற ஸ்டைல்ல்ல்... அவ்வ்வ்வ்வ்வ்....

ஒரே வார்த்தை ஓஹோன்னு வாழ்க்கைங்குற மாதிரி ஒரே பேருல எங்க வாழ்நாள்ல மறக்கமுடியாத மனிதராக ஆன சிவில் professor சித்தார்த் ஆறாவது நண்பேன்டா.


4. இந்த நாலாவது எடத்த ரெண்டு பேரு ஷேர் பண்ணிக்கிறாங்க. ஏன் ஷேர்
பண்ணிக்கிறாங்கன்னு கேக்குறீங்களா?வேற வழியில்ல... வாழ்க்கைல என்ன
இன்ப துன்பங்கள் வந்தாலும் இவங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணிதான் ஆகனும். ஏன்னா இதுங்க ரெண்டுக்கும் கல்யாணம் ஆயிருச்சி.

மொதல்ல மணமகள பத்தி பாப்போம்... இது நாங்க காலேஜ்ல join பண்ணும்போது மோர் ஊத்தி வைக்கிற ஜக்கு மாதிரி இருந்துச்சி... முடிச்சி போகும்போது பீர் ஊத்தி வைக்கிற muggu மாதிரி ஆயிருச்சி.. இத பாக்கும் போதெல்லாம் பசங்க கேக்க ஆசைப்படுற ஒரு ஒரு கேள்வி "அடேங்கப்ப்பா... எந்த கடையில நீ அரிசி வாங்குற?". இதுகிட்ட observation sign வாங்குறதும் ஒண்ணுதான்... ஒரு வெறிநாய கூட ஒருநாள் full ah உக்கார்ந்துருக்கதும் ஒண்ணுதான்... பெரிய ஐன்ஸ்டீன் அக்கா பொண்ணுன்னு நெனப்பு இதுக்கு.

இப்ப மணமகன பத்தி பாப்போம். நா போன பதிவுல, ஒரு மாடு
EEE டிபார்ட்மெண்டுலருந்து அத்துகிட்டு chemistry lab பக்கம்  ஓடுச்சின்னு சொன்னேன்ல அது இதுதான். இது ஒரு தாவர உண்ணி.. இவரால யாருக்கும் எந்த கெடுதலும் வராது.அப்பப்ப க்ளாஸ் எடுக்குறேன்னு மட்டும் மொக்கையை போட்டு சாவடிப்பரு. மத்தபடி ரெம்ப நல்லவரு.

நான்காவது இடத்தை பகிர்ந்து கொள்ளும் ஜோடி மாடு (எ) மாடசாமி- அவ்வை
கண்ணகி (எ) ஷண்முகபிரியா.


 3. இவரு ACCET யின் chitti த ரொபாட்...speed 1 terra Hz.. memory 1 zeta byte. இவர பத்தி சுருக்கமா சொல்லனும்னா இவரு ஒரு suchitra வாயன். வெளக்கமா  சொல்லனும்னாலும் சுசித்ரா வாயன்னு தான் சொல்லமுடியும். நம்மல்லாம் ஒரு நிமிஷத்துக்கு அதிக பட்சமா ஒரு 100 வார்த்த பேசுவோம்னா இவரு ஒரு நிமிஷத்துக்கு 1000 வார்த்த பேசுவாரு. வாயில எப்பவும் கிரைண்டர் ஓடிகிட்டே இருக்கும். இவரு board ல எழுத ஆரம்பிக்கும் போது, கொசு கடிக்குதேன்னு அடிச்சிட்டு நிமிந்தா board full ah எழுதி முடிச்சிருப்பாரு. அவ்வளவு வேகம். என்னதான் அவரு இவளோ எழுதுனாலும் நம்மளோட 5 in 1 நோட்டுல எழுத போறது என்னவோ கணக்கோட மொதவரியையும் கடைசி வரியையும் தான். மத்தவங்களுக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. மத்த professors எல்லாம் internal mark கம்மி பண்ணிருவேன் கம்மி பண்ணிருவேன்னு கடைசில நல்ல மார்க் போட்டுருவாங்க. ஆனா இவரு கம்மி பண்ணிருவேன் கம்மி பண்ணிருவேன்னு சொல்லி உண்மையிலயே single digitல internal mark போட்டு நம்மள கடுப்பேத்துவாரு. "But உங்க நேர்மை எங்களுக்கு புடிச்சிருக்கு"ன்னு சொல்லி நாங்களும் விட்டுருவோம். ஆகவே மூன்றாவது நண்பேன்டா விருதை தட்டிச் செல்பவர்  Maths professor ரங்கசாமி


2. இவர பத்தி சொல்லனும்னா, பாக்குறதுக்கு வெளக்க தேச்சா வர்ற அலாவுதீன்பூதம் மாதிரி இருப்பாரு. இவரு class க்கு மட்டும் இதுவரைக்கும் full attendance வந்ததே இல்ல. ஏன்னா இவரு ஒரு இங்கிலீஷ் வாத்தியாரு. நம்ம பசங்களுக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்த இங்கிலீஷ் தான். அதுவும் நம்மாளுக்கு எல்லாமே மதியானம் மொத period..அவன் அவன் சாப்டு வந்த டயர்டு இருப்பான். அதுவும் புதன் கிழமை ஆனா சுத்தம்.. யாருமே இல்லாத க்ளாஸ்ல இவருக்கு இவரே பாடம் நடத்திக்கிட்டு இருப்பாரு. (காரணம் புதன் கிழமை தான் ஹாஸ்டல்ல chicken)

இவரு பாடம் நடத்துறது மட்டும் இல்லாம, சில extra curricular activities யும் நிறைய
கவனம் செலுத்துவாரு. அதான் நம்ம NSS camp incharge இவருதான். ஒரு தடவை
தெரியாம நானும் NSS camp க்குன்னு ஒரு ஊருக்கு போயிட்டேன். நள்ளிரவு 5 மணிக்கெல்லாம் பசங்கள எழுப்பிவிட்டு தியானம் பன்னுங்கன்னு சொல்லி இவரு பண்ண கொடுமை இருக்கே,,,அய்யோய்யூயூ.

அதுகூட பரவால... தூக்கத்துல எழும்பி உக்காந்துருக்க பசங்ககிட்ட  "நம்ம ஆன்மாவ வெளிய உலவ விடுங்க...மனச கட்டுப்படுத்துங்க" ன்னு இவரு போட்ட மொக்கையில "அவன் அவன் ஒண்ணுக்கு வரலன்னு கஷ்டப்படுறான் இவருக்கு எளனில தண்ணி வரலயாம்பா.."ன்னு நம்ம பசங்கல்லாம் டென்ஷன் ஆயிட்டானுங்க..சரி காலையில தான் இப்புடின்னா, மதியானம் அந்த ஊருகாரனுக 'கொல்லை'க்கு போறதுக்காக வச்சிருந்த ஒரு ஏரிய எங்கள சுத்தம் பண்ண சொல்லி கொன்னுட்டாரு. கண்டுபுடிச்சிருப்பீங்களே.. அவரேதான். நம்ம இங்கிலீஷ் professor அன்பழகன் தான் சிறந்த இரண்டாவது நண்பேன்டா.

1.நா மொத மொத காலேஜுக்குள்ள வந்தப்ப, ரயில் இஞ்ஜின்ல வர்ற
மாதிரி செம்ம பொகை.. நா கூட அழகப்ப செட்டியாரு காலேஜுக்கு ரயிலெல்லாம்வாங்ககி விட்டுருப்பாரு போலன்னு நெனச்சேன்.. அப்புறம் நல்லா பாத்தாதான்தெரியிது "புகைக்குள் ஒருவன்". செவத்துல வெள்ளையடிக்கும் போது நடுவுல தெரியாம மூஞ்ச உள்ள விட்ட மாதிரி ஒருத்தரு சிகரெட் குடிச்சிகிட்டே வந்தாரு.. அப்புறம்கேட்டாதான் தெரியுது அவருதான் மெக்கானிக்கல்ல பெரிய ஆபீஸ்ருன்னாயிங்க. என்னடா பாக்க ஆபீஸ் பாய் மாரி இருக்காரு இருவர போயி ஆபீசருங்குறாயிங்களேன்னு பாத்தா, மெய்யாலுமே அவரு ஒரு பெரிய அப்பாட்டக்கர் தான் போலருக்கு.. ஞாயித்து கெழமையானா, தமிழே ஒழுங்கா எழுத படிக்க தெரியாத நம்ம காலேஜ் பசங்களுக்கு French class எடுக்கஆரம்பிச்சிருவாரு.

அதுமட்டும் இல்லாம இவருதான் காலேஜ் ஆர்கெஸ்ட்ரா co-ordinator. இந்த
சாக்குலயே நம்மாளு வருஷா வருஷம் stage la ஒரு பாட்டு பாடிருவாரு..
அவரு பாடும் போது குரல கேக்கனுமே... அடடடா.. அய்யயய்யா... ஆஹ்ஹா..
அப்புடியே காதுல கடப்பாரைய விட்டு நோண்டுன மாதிரி இருக்கும்.
இப்புடித்தான் ஒரு நாளு பக்கத்து ஊரு NSS camp function la "காவியமா..
நெஞ்சின் ஓவியமா" பாட்ட அந்த ஒரிஜினல் பாட்ட பாடுன  C.S.ஜெயராமன் மாதிரியே பாடுனாரு பாருங்க... அவரு "கா....வியமாஆஆஆஆ" ன்னு
இழுத்த இழுப்புல "எவண்டா stage la வாந்தி எடுக்குறதுன்னு ஊர்காரனுக சண்டைக்குவந்துட்டாய்ங்க"...
பல போட்டிகளுக்கு பிறகு எல்லாரையும் முந்திக்கொண்டுமுதலாவது நண்பேன்டா விருதை பெறுவர், மெக்கனிக்கல் புகைவண்டி மிஸ்டர் ரவிகுமார்.

இதே மாதிரி நண்பேன்டா விருது நம்ம கலேஜ் பசங்களுக்கும் குடுக்கனும்னு ஆசைதான்ஆனா என்ன பய புள்ளைங்க எல்லாம் பக்கதுலயே இருக்கதுனால வந்து பொளிச்சின்னுஅடிச்சிபுடுவானுக... அதான் கொஞ்சம் பீதியா இருக்கு..  நம்ம காலேஜ் பத்தி யாராதுஎழுத ஆசைப்பட்டா இந்த blogspot ல எழுதலாம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

BKK said...

comments about the people are very funny

அருண் பிரசாத் ஜெ said...

Super ......


Arun Prasath J
CSE (2003 - 2007) , ACCET

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...