Wednesday, August 5, 2015

காரைக்குடியில் சிம்ரன் வாய்ப்பாடு!!!


Share/Bookmark
பன்னிரெண்டாவது வரைக்கும் வீட்டில இருந்தே படிச்சிட்டு, காலேஜ்ல முதல் முதலா ஹாஸ்டல்ல தங்குறப்போ இருக்க கஷ்டம் இருக்கே. ஆத்தாடி. கொஞ்ச நாளுக்கு நரகம் மாதிரி இருக்கும். பாக்குறவய்ங்கல்லாம் புதுசா இருப்பாய்ங்க. காலங்காத்தால நம்ம வீட்டுல அம்மா எழுப்பி காப்பி குடுக்குறது, போதும் போதும்னு சொன்னாலும் எக்ஸ்ட்ராவா ரெண்டு தோசை வச்சி சாப்ட சொல்றதெல்லாம் அப்போதான் ஞாபகத்துக்கு வரும். அங்க நம்மளக் கண்டுக்க ஒருத்தன் இருக்க மாட்டான். காலையில நாமாளா எழுந்தாதான் உண்டு. நமக்கா பசிச்சி போய் சாப்டாதான் உண்டு. எறுமை மாடு வயசுல வெளில அதச் சொல்லி அழுகக்கூட முடியாது. எப்படா வெள்ளிக்கிழமை சாயங்காலம் வரும்னு இருக்கும். வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஹாஸ்டல்லருந்து வீட்டுக்கு கிளம்புறப்போ ஒரு ஜாலி இருக்கே… ஸ்கூல் படிக்கிறப்போ கூட அப்டி ஜாலியா இருந்ததில்லை.

ஃபர்ஸ்ட் இயர் பசங்க எப்படா வெள்ளிக்கிழமை வரும் வெளில போகலாம்னு காத்திருந்தா, இந்த செகண்ட் இயர் பசங்க எப்படா வெள்ளிக்கிழமை வரும் இவியங்க வெளில வருவாய்ங்கன்னு காத்துருப்பாய்க்க. ஏன்னா மத்த நாள்ள எவனும் வெளில போகமாட்டான். ஆனா வெள்ளிக்கிழமை ஊருக்கு போகும்போது பஸ் ஸ்டாப்புக்குப் போய் தனியாதானே பஸ் ஏற வேண்டி வரும். அதுக்குன்னே மீனப்புடிக்க காத்திருக்க கொக்கு மாதிரி அங்கயே குத்த வச்சி எவனையாச்சும் கவ்வி அவன ராகிங் பண்ணி என்ஜாய் பண்ணிக்குவானுங்க.

IRCTC la தீவாளிக்கு டிக்கெட் கூட புக் பன்னிடலாம். ஆனா வெள்ளிக்கிழமை சாயங்காலம் காரைக்குடி to திருச்சி PL.A பஸ்ல சீட்டு கிடைக்கிறதுதான் ரொம்பப் கஷ்டம்.  ஃப்ர்ஸ்ட் இயர் ஹாஸ்டல் கட்டில மொதக்கொண்டு காலி பண்ணிட்டு ஊருக்கு கிளம்பிருவாய்ங்க.

என்னோட நேரம் நா ஒருதடவ காரைக்குடியிலருந்து பட்டுக்கோட்டைக்கு ட்ரெயின்ல ஏறி உக்கார சுத்தி நாலு சீனியர் பசங்க வந்து உக்காந்தாய்ங்க. அப்புறம் என்ன? வடிவேலு சில்லரை வாங்க நாலு குடிகாரய்ங்ககிட்ட மாட்டிக்கிட்டு “ரெண்டம்பது… ரெண்டம்பது… ரெண்டம்பது… ரெண்டம்பது.. ஆகமொத்தம் முப்பது.. ச்சியேர்ஸ்” ன்னு சொல்ற மாதிரி பட்டுகோட்டை வர்ற வரைக்கும் மாத்தி மாத்தி என்னை சிம்ரன் வாய்ப்பாடு சொல்ல வச்சி என்ஜாய் பன்னிட்டுவந்தாய்ங்க.  அது என்ன சிம்ரன் வாய்ப்பாடுன்னு கேக்குறீங்களா? இந்தா சொல்றேன் கேளுங்க

ஒரு சிம்ரன் = சிம்ரன்

ரெண்டு சிம்ரன் = சிம்ரன் சிம்ரன்

மூணு சிம்ரன் = சிம்ரன் சிம்ரன் சிம்ரன்

ஈஸியா இருக்குறதுல்ல? எதோ ரெண்டு மூணுன்னா பரவால்ல. இது மாதிரி முப்பது வரைக்கும் சொல்லனும். அத விடக் கொடுமை என்னன்னா இடையில ஒரு சிம்ரனை விட்டுட்டாலும் திரும்ப மொதல்லருந்து ச்சியேர்ஸ் தான். சேகர் செத்துத்டான். அத்தனை தடவ சிம்ரன் பேர வேற எவனும் வாழ்க்கையில சொல்லிருக்க மாட்டாய்ங்க
.
இந்த வெள்ளிக்கிழமை மூட்டியைக் கட்டுறதெல்லாம் செட்டு சேருற வரைக்கும் ஒரு மூணு மாசத்துக்குத் தான். செட்டு சேந்துட்டா அப்புறம் வார வாரம்ங்குறது ரெண்டு வாரத்துக்கு ஒருதடவ மூணுவாரத்துக்கு ஒரு தடவன்னு மாறி ஃபைனல் இயர்ல ஹாஸ்டல் வார்டன் கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளுனாலும் ஊருக்குப் போகமாட்டாய்ங்க. அந்த ஆரம்பத்துல செட்டில் ஆக எடுக்குற மூணு மாசம் மட்டும் திங்கள் செவ்வாய் மாதிரி ரொம்ப மெதுவா போகுமே தவிற, அதத்தவிற மத்த மூணே முக்கால் வருஷமும் சனி ஞாயிறு மாதிரி சர்ர்ர்ன்னு போயிறும்.

காரைக்குடியில சீட்டு கிடைச்சப்புறம் டியூஷன் சாரயெல்லாம் போய்ப் பாக்கும்போது, ஒரு சார் “காரக்குடியா.. அட அங்க நம்மகிட்ட போன வருசம் படிச்ச பையன் இருக்காம்பா… பேரு எழில் வேந்தன். அவனப்பாரு எதாவது ஹெல்ப் வேணும்னா பண்ணுவான்” ன்னு சொன்னாரு. அப்பாடா.. எதாவது ப்ராப்ளம் வந்துச்சின்னா அவரப் புடிச்சிற வேண்டியது தான்னு நினைச்சிக்கிட்டேன்.

அட்மிஷன் போட்ட உடனே  பேரண்ட்ஸ் மீட்டிங்குல பேசுன எங்க ப்ரின்சிபாலு “தம்பிங்களா.. நம்ம காலேஜ்ல ராகிங்கெல்லாம் இல்லை. ஆனாலும் நீங்க ஆறு மணிக்கு மேல வெளில எங்கயும் சுத்தக்கூடாது. க்ளாஸ்லருந்து நேரா ஹாஸ்டலுக்குத்தான் போகனும். அங்க இங்க சுத்தக்கூடாது” ன்னு நிறைய எச்சரிக்கை மணிகள அடிச்சிவிட்டாரு. சரி நம்ம யாரு வம்புக்கும் போறதில்லை தும்புக்கும் போறதில்லை. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்துடுறது.




ஆனாலும் அந்த சீனியருங்களோட கோவம் கனலா எரியிறது. போன வருஷம் அவிங்க சீனியர்கிட்ட வாங்குனதயெல்லாம் நம்ம கிட்ட இறக்கியே ஆகனும்னு வெறியோட சுத்திக்கிட்டு இருக்காங்க. (அய்யய்யோ.. கதை வேற மாதிரி போகுதே) ஒரு நாள்… க்ளாஸ்ல காலை செஷன் தூக்கத்த முடிச்சிக்கிட்டு மத்தியான சாப்பாட்டுக்கு, ஹாஸ்டலுக்கு கிளம்புனேன். புதுசுங்குறதால தனியாத்தான் 1st floor லருந்து இறங்கி வந்தேன். க்ளாஸ்ல இருந்து காலேஜ் மெயின் கேட்டுக்கு கிட்டத்தட்ட ஒரு 200 மீட்டர் நடக்கனும்.

நடக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே சைடுல ரெண்டு பக்கமும் அணைச்ச மாதிரி ரெண்டு சீனியருங்க வந்து, “டேய் திரும்பக் கூடாது.. பேசிக்கிட்டே நட” ன்னாய்ங்க. அய்யய்யோ… சிக்கிக்கிட்டோமேன்னு நினைச்சிக்கிட்டே “சரிண்ணேன்” ன்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சேன். அவனுங்களும் கூடவே நடக்க ஆரம்பிச்சாய்ங்க.

“பேர் என்னடா?”  “சிவா ண்ணே’

”எந்த டிப்பார்மெண்டு?”  “EEE ண்ணே”

“நாங்களும் EEE தான்” ன்னு அதுல ஒருத்தர் சொன்னதும்

“அப்புடியாண்ணே… “ ன்னு லேசா சிரிச்சேன். “ஏய்ய்ய்.. என்னடா பல்ல காமிக்கிற? நாங்க உன்ன இப்ப சிரிக்கச் சொன்னோமா? மூடிகிட்டு கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு” ன்னதும் நா கொஞ்சம் பயந்து போய் “இவரு ரொம்ப பயங்கரமானவரா இருப்பாரோ” ன்னு நினைச்சி படக்குன்னு வாயில ஓப்பன் பன்னிருந்த Door ah க்ளோஸ் பன்னிட்டேன்.  
“என்ன உங்க பசங்களையெல்லாம் ஹாஸ்டலுக்கு வெளியவே காணும்…. ?”
“வெளில வரக்கூடாதுன்னு சொல்லிருக்காங்கண்ணே”

“அவிங்க உங்கள காலையில வெளிக்கு போகக்கூடாதுன்னு கூடத்தான் சொல்லுவாய்ங்க. சொன்னா கேட்டுருவியா?”

“…..” என்ன சொல்றதுன்னு தெரியாம நா பம்பிக்கிட்டே தொடர்ந்து நடந்தேன்.

“சரி எந்த ஊரு..”

“பட்டுக்கோட்டை ண்ணே”

“பட்டுக்கோட்டை யா” ன்னு கேள்வி கேட்டுக்கிட்டு வந்தவன் ஒரு ஜெர்க் அடிச்சான்.

அட நம்மூர் பேரச்சொன்னாலும் இவிங்களுக்கு ஒரு பயம் இருக்கத்தான்யா செய்யிது.. அப்புடியே மெய்ண்டெய்ண் பன்னுவோம்னு மனசுக்குள்ள ஒரு சந்தோஷம்.

“பட்டுக்கோட்டையா பட்டுக்கோட்டைக்கு பக்கத்துலயா…?”

“பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல மதுக்கூருண்ணே”

என்ன இவ்வளவு விவரமா கேக்குறாரு… நமக்கு எதுவும் லெட்டர் கிட்டர் போடப்போறாரு போலருக்கு .. எதுக்கும் பின்கோடையும் சொல்லி வைப்போம்”னு சொல்ல வாயெடுத்தேன்.

”சரி படிச்சது பட்டுக்கோட்டையா பட்டுக்கோட்டைக்கு பக்கத்துலயா?”
“பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல நாட்டுச்சாலை ண்ணே…”

நம்மளப் பத்துன ஃபுல் டீட்டெய்ல் கலெக்ட் பண்ணிட்டு தான் களத்துல இறங்கிருக்காய்ங்களோ… ரேகிங் பண்றதுக்கு கூட பேக்ரவுண்ட் ஒர்க் பண்ணுவாய்ங்க போலருக்குன்னு நினைச்சிகிட்டேன். ஆனா அவன் கேள்வி கேக்குறத மட்டும் நிறுத்தவே இல்லை.

”ஆமா ஃபிசிக்ஸ் யார்கிட்ட ட்யூஷன் படிச்ச?” “CG கிட்ட”

“அப்போ கெமிஸ்ட்ரி ரதன குமார்கிட்டயா?” ”ஆமா…”

“சரி சீனியர் யாரையாவது  தெரியுமா?”

“தெரியும்ணே.. எழில் வேந்தன்னு எங்க ஊர்க்காரரு இங்க தான் படிச்சிட்டு இருக்காரு” ன்னு தைரியமா நா சொல்ல, கேள்வி கேக்காம கூட வந்தவன் கெக்க புக்கன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டு

“டேய் எழில் வேந்தன நீ பாத்துருக்கியா?”  “பாத்தது இல்லைண்ணே…”

“இவன் தாண்டா எழில் வேந்தன்” ன்னு இவ்வளவு நேரம் என்ன நோண்டி நோண்டி கேள்வி கேட்டவன காமிச்சி அவன் கூட வந்தரு சொன்னாரு. (இப்ப எதுக்கு அவர அவுர் இவுர்ன்னு சொல்றேன்னு பின்னால தெரியும்)
அடப்பாவி… எவனாச்சும் ரேகிங் பண்ணா உன் பேர சொல்லலாம்னு பாத்தா கடைசில நீயே வந்து என்னைய மெரட்டிக்கிட்டு இருக்கியேய்யான்னு மனசுக்குள்ள நினைச்சிட்டு, இம்சை அரசன் வடிவேலு டைப்புல ஒரு அசட்டு சிரிப்ப சிரிச்சிட்டு “ரொம்ப சந்தோசம்ணே” ணேன். “யாரு ரத்ன குமார் தான நா இங்க படிக்கிறத சொன்னாரு?”  “ஆமாண்ணேன்” ன்னு சொன்னது தான் தாமதம்.

“காலங்கத்தால நம்மாத்துல தான் டிப்பன்னு சொல்லிருப்பாரே.. இந்த காலெஜ்ல சீட்டு கிடைச்சது லக்குன்னு சொல்லிருப்பாரே… அங்க நம்ம சீனியரெல்லாம் இருக்காங்க எதுக்கும் பயப்படாதன்னு சொல்லிருப்பாரே”
“ஆமாண்ணே..”

என்கிட்டயும் சொன்னானுவளே.. இங்க ஒண்ணும் பன்ன முடியாது. உனக்கு எதாவது வேணும்னா தயவுசெஞ்சி 2nd year ஹாஸ்டல் பக்கம் வந்துடாத.. எவன் கைலயாவது மாட்டுனா மாவாட்டிருவானுங்க. அதனால நானே அப்பப்ப உன்ன ஹாஸ்டல்ல வந்து பாக்குறேன்” அவர் சொன்னதும்தான் கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சி. எழில் வேந்தன் நம்ம ஊர்க்காரரா இருந்ததால டக்குன்னு செட் ஆயிட்டாரு. ஆன அவர் பக்கத்துல ஒருத்தார் வந்தாருன்னு சொன்னேனே.. அவர் மட்டும் சிரிக்கவே இல்லை.

அதுக்கப்புறம் ஒரு நாலஞ்சி இடத்துல நானும் பாத்து “ஐ.. நமக்குத் தெரிஞ்ச அண்ணன்னு சிரிப்பேன்…. ஆனா அவர் மொறைச்சிக்கிட்டே “பல்லக் காட்டாதடா” ம்பாறு. அதுக்கப்புறம் நாலு வருஷத்துல ஒரு அஞ்சாறு தடவ தான் அவர பாத்துருப்பேன். காலேஜ் முடிக்கிறதுக்குள்ள அடிச்சி புடிச்சி ஒரு வேலைய  வாங்கியாச்சி.

 கம்பெனில ஜாய்ண் பன்ற முதல் நாள். அதே மாதிரி புது இடம். புது ஃபீலிங்.. காலையில ஃபுல்லா ஓரியண்டேஷன்னு கம்பெனி எஸ்டிடிக்கள சொல்லி தூங்க வச்சிட்டு மத்தியானம் கம்பெனி கேண்டீனுக்கு சாப்பிட அழைச்சிட்டு போனாங்க. கேண்டீனுக்குள்ள நுழையும்போது அங்க சாப்பிட்டுகிட்டு இருந்த ஒருத்தர் என்னை பாக்க, நா அவரப் பாக்க “இவர எங்கயோ பாத்துருக்கோமே.. இது அது இல்ல?” ன்னு நினைக்க, அவரு அதுக்குள்ள எழுந்து வந்து என்னப்பாத்து “டேய்… என்னடா இந்தப்பக்கம்?” சிரிச்சிட்டே கேக்க, பதிலுக்கு நா சிரிக்கிறதா வேணாமான்னு யோசனையிலயே நின்னுக்கிட்டு இருந்தேன். சிரிச்சா ஒரு வேளை “என்னடா பல்லக் காட்டுற?” ன்னு கேட்டாலும் கேட்டுருவாரோன்னு. 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

சுவையான பதிவு. கல்லூரியில் ராகிங் அனுபவம் எனக்கு இருந்ததில்லை! நாங்கள் தான் கல்லூரி ஆரம்பித்த இரண்டாம் வருடத்தில் சேர்ந்தவர்கள்.

absentcollins said...

Adada.... Superu na... Oru 5 mins apdiye past ku poitu vandhen..thank you :P

Unknown said...

Nice memories...me too experienced the same in my college..

pudugaianjal said...

Nice... Super... College pona madiri feel

BALA said...

Thala thirumbavum namba college poita vanda feel.. Sema, I am from 2005-09 batch EEE

யாஸிர் அசனப்பா. said...

செம்ம பதிவு ப்ரோ, நிறைய இடத்துல சிரிக்கத் தோனுச்சு, ஆனா பல்லக்காட்டாதன்னு சொன்னதால உள்ளுக்குள்ள சிரிச்சிக்கிட்டேன்.

கலக்கல்.

Natarajan S said...

மச்சி அருமையா எழுதி இருக்க. தினமும் வந்து ஒரு என்ட்ரிய போட்ருவேன் உன்னோட புது பதிவுக்காக... Nice.. Keep rocking as always!!!

Anonymous said...

Siva, neenga tamil medium thana padichinga school la ? yen na English medium padichavanga ivlo super ah tamil la elutha mudiyathu ;-)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...