Wednesday, September 7, 2016

நம்ம துபாய்ல இருந்த ரேஞ்சுக்கு…!!!


Share/Bookmark
ரெண்டு நாளுக்கு முன்னால facebook ல ஒரு பிரபலம் போன வாரம் சமீபத்துல சசிகுமார் நடிப்புல ரிலீஸான கிடாரிங்குற படத்துக்கு விமர்சனம் எழுதி அதுல நிறைய புலம்பிருந்தாரு. அதுக்கு ஒருத்தர்
“என்ன சார்.. நீங்க போய் இந்தப் படம்லாம் பாக்கலாமா? நீங்க பாக்குற மாதிரி இன்னொரு படம் வந்துருக்கேன்னு இன்னொரு படத்து பேர சொல்லி, அத விட்டுட்டு இந்த பாடாதி படத்துக்கெல்லாம் ஏன் சார் போனீங்க?” ன்னு கமெண்ட் போட்டுருக்கார்.

அதுக்கு நம்ம பிரபலம் “என்ன சார் பன்றது பொது வாழ்க்கைன்னு வந்துட்டதால இந்த மாதிரி படத்துக்கெல்லாம் போக வேண்டியிருக்கு” ன்னு ரிப்ளை பன்னிருந்தாரு.

எனக்கு உடனே   “அதாவது சார் இங்கிலீஸ் பேப்பர் தான் படிப்பாரு… பீட்சா பர்க்கர் தான் சாப்புடுவாரு” ந்ங்குற சந்தானம் வசனம்தான் ஞாபகம் வந்துச்சி.

அவரு மட்டும் இல்லை. அவர மாதிரி இன்னும் நிறைய பேரு இந்த மாதிரிதான் சுத்துறாய்ங்க. தமிழ்ப்படங்களை பாக்குறதே ஒரு பாவமாவும், வெளில சொல்ல கூச்சப்படுற விஷயமாவும்தான் சித்தரிக்கிறாய்ங்க. இன்னும் சில பேரு சில படங்களை பாத்தேன்னு சொல்றதுக்கு “அய்யய்யோ… என்னை ஃப்ரண்ட்ஸ் கம்ப்பல் பன்னி கூப்டதால இந்தப் படத்துக்கு வந்தேன்… இல்லைன்னா வந்தே இருக்கமாட்டேன்” ந்ங்குற பில்ட் அப்போட ஆரம்பிக்கிறத நிறைய தடவ பாத்துருக்கேன்.

இது எப்டின்னா, நம்ம பெற்றோர் ஏழைங்குறதாலயும், கல்வி அறிவு இல்லாதவங்கங்குறதாலயும் மத்தவங்ககிட்ட  “என்ன சார் பன்றது… இவங்க என்னோட அப்பா அம்மாவா இருக்க தகுதியே இல்லாதவங்க.. ஆனா அப்பா அம்மா வேணுமேங்குறதுக்காக என்னோட கெரகம் இவங்கள அப்பா அம்மான்னு சொல்லிகிட்டு இருக்கேன்னு சொல்ற மாதிரி இருக்கு.

நாப்பது அம்பது இங்க்லீஷ் படங்களையும் பத்து பதினைஞ்சி கொரியா படங்களையும் பாத்துட்டு இவய்ங்க குடுக்குற அலும்பு இருக்கே.. ஆத்தாடி.. பாருங்க… எல்லா மொழிலயும் பாருங்க… நல்ல படங்களை ரசிங்க.  ஆனா தமிழ்லயும் அதே மாதிரி படம் எடுக்கனும்னு ஆசைப்படுறீங்க. மத்தவய்ங்கல்லாம் அவன் அவனோட ஒரிஜினல் ஸ்டைல்ல படம் எடுக்குறாய்ங்க.

அதே மாதிரிதான் நம்மாளுகளும். நம்ம சினிமாவுக்குன்னு ஒரு மேக்கிங் ஸ்டைல் இருக்கு. நம்ம ஆடியன்ஸுக்குன்னு ஒரு டேஸ்ட் இருக்கு. அதத்தான் நம்மாளுங்க எடுக்குறாய்ங்க. அவய்ங்க எடுக்குற படம் நல்லாருக்கு நல்லா இல்லைங்குறது வேற விஷயம். ஆனா நீங்க நாலு கொரியன் படம் பாத்துட்டீங்கங்குறதுக்காக “Something fundamentally wrong with our indian cinema” ன்னு ஆரம்பிச்சிட்டீங்க.

ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னால வேலைக்காக சில மாதம் வெளிநாடு பொய்ட்டு வந்தேன். அப்ப ரொம்ப நாள் கழிச்சி என்ன பாத்த என்னோட நண்பன் ஒருத்தன் “ என்ன மாப்ள.. உன்னப் பாத்தா வெளிநாடு பொய்ட்டு வந்தவன் மாதிரியே இல்லையே” ன்னான். எனக்கு ஒண்ணுமே பிரியல.

அவன் என்கிட்ட என்ன எதிர்பார்த்தான்னும் தெரியல. வெளிநாட்டுக்கு பொய்ட்டு வந்துட்டா எப்ப பாத்தாலும் பொது இடங்கள்ல அவனுங்கள மாதிரியே ஒரு ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு ஒரு கேன்வாஷ் ஷூவ போட்டுக்கிட்டு கண்ணாடி போட்டுக்கிட்டு சுத்தனும்னு நினைச்சானான்னு தெரியல. ஊர்ப்பக்கம் இருக்கவங்க  வெளிநாட்டுலருந்து வந்தாலே வெற்றிக்கொடி கட்டு வடிவேலு மாதிரி தனியா தெரிவாய்ங்க. அவய்ங்க கட்டுற கைலி டிசைன்லருந்து அடிக்கிற பெர்ஃபியூம் மொதக்கொண்டு தனியாத் தெரியும். அப்டி எதுவும் எதிர்பாத்தானான்னும் தெரியல.

ஒரு மூணு மாத ஆறு மாத வெளிநாட்டு பயணம் நம்மோட அடிப்படையவே மறக்க வச்சி வேற மாதிரி மாத்துதுன்னாதான் something fundamentally wrong. நாம நம்மளா இருக்கதுல என்ன ப்ரச்சனை? அந்த ஊர்க்காரய்ங்க காலையிலயே பர்க்கர் சாப்புறாய்ங்க.. நம்மூர்ல வெறும் பழைய சோறுதான் இருக்குன்னு பொலம்புற கதை தான் இதெல்லாம்.

உண்மைய சொல்லப்போனா இப்பல்லாம் B, C செண்டர்கள்ல மக்கள் மத்தியில தியேட்டருக்குப் போய் சினிமா பாக்குற ஆர்வம் குறைஞ்சதே இந்த மாதிரி அந்திய மொழி சினிமாவோட ஆதிக்கம் நம்ம சினிமாவுல நுழைஞ்சதுனாலதான். இளம் இயக்குனர்கள், அடுத்த கட்ட சினிமான்னு ஆரம்பிக்கிற பல பேரு இந்த மாதிரி அந்நிய மொழிப் படங்களோட தாக்கத்தால நம்ம சினிமாவயும் மாத்தனும்னு நினைச்சி புது மாதிரியா படம் எடுக்குறேன்னு எடுத்து மக்களோட ஆர்வத்த குறைக்கிற வேலையத்தான் பாத்துட்டு இருக்காய்ங்க. ஒரு சாரரை அவங்க திருப்தி படுத்துனாலும் பெரும்பாலான மக்களுக்கு அது ஏமாற்றத்தையே தருது.

நம்ம மொழியில எடுக்கப்படுற படங்களை அதே ஸ்டைல்ல அப்படியே ஏத்துக்குறதுல நமக்கு என்ன தயக்கம்? அதுல என்ன வெக்கம்? நாலு பேரு சுத்தி ஏத்திவிடுறதுக்கு இருந்தாலே தந்நிலை மறந்து வானத்திலிருந்து குதிச்சதப்போல அதிகப்பிரசங்கித்தனங்களைக் காட்டும் கூட்டம் இங்க ஏராளம். ஆரம்பத்துல டீசண்ட்ட இருந்துட்டு கொஞ்சம் ஃபாலோயர்ஸ் அதிகமாயிட்டாலே, சமூக வலைத்தளங்கள்னு கூட பாக்காம கெட்ட வார்த்தைகளை நேரடியா பதிவிடும் தைரியம் பலருக்கு வந்துருது.

பத்தாயிரம் பேர் ஃபாலோ பன்றாங்கங்குறதுக்காக இவங்களோட behavior eh இப்படி மாறும் போது, பல லட்சம் ரசிகர்களோட, இருபது முப்பது கோடி பிஸினஸ் பன்ற படங்களைக் கொடுக்கும் சிவகார்த்திகேயர்கள் சீன் போடுவதில் எந்தத் தவறும் இல்லைன்னே தோணுது.

                             

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

கருப்பன் (A) Sundar said...

//உன்னப் பாத்தா வெளிநாடு பொய்ட்டு வந்தவன் மாதிரியே இல்லையே// why பிளட்... same பிளட்!!

ஜீவி said...

நச்னு சொல்லிட்டீங்க...

Anonymous said...

super bro

கருப்பன் (A) Sundar said...

Facebookஐ, Facebookனு சொன்னதுக்காகவே உங்களுக்கு ஒரு பூங்கொத்து குடுக்கலாம். பெரிய தமிழ் பத்திரிகையில கூட முகநூல், முகபுத்தகம்னு கண்டபடி எழுதி கடுப்படிக்கிறானுக. கண்ணாயிரம் == Eye-Thousand?

உங்க page ரெம்ப மெதுவா லோட் ஆகுது (more than 30 secs even on a 300Mbps line).

Unknown said...

//உங்க page ரெம்ப மெதுவா லோட் ஆகுது (more than 30 secs even on a 300Mbps line).//

The design of Blogger is (If you don't use your own domain) Geographical sub domain. That is... when he writes from India/US it will be stored in muthusiva.blogger.com (India or US server) and when some one from UAE reads it it will load as muthusiva.blogger.ae from Google's UAE server and for some one from UK it will load as muthusiva.blogger.co.uk from google's UK server.

But here Muthu use his own domain muthusiva.in but uses Blogger platform. By design
from where ever you read (UK or US or UAE) his site will load from the same orgin not from the geographically diversified orgin.

Muthu, if you want to give a better user experience, Migrate to a wordpress CMS platform with the same domain and use a free CDN platform like cloudflare.

கருப்பன் (A) Sundar said...

//உங்க page ரெம்ப மெதுவா லோட் ஆகுது (more than 30 secs even on a 300Mbps line).//

It takes a long time to load ta.indli.com (must be part of a widget I guess)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...