Monday, September 18, 2017

துப்பறிவாளன் – A மிஷ்கின் இறக்குமதி!!!


Share/Bookmark
பூவே உனக்காக படத்துல விஜய்க்கும் சார்லிக்கும் ரூம் மேட்டா மதன் பாப் இருப்பாரு.. சார்லி அவர் கிட்ட ”நீங்கஎன்ன பன்றீங்க?”ன்னு கேட்டதும் மதன்பாப் “கதை எழுதுறேன்”ம்பாறு. உடனே சார்லி “வந்த படத்துக்கா வராதபடத்துக்கா?”ன்னு நக்கலா கேப்பாறு. அதுமாதிரி வந்தபடங்களுக்குகதை எழுதுற இயக்குனர்கள் நிறைய பேருஇருக்காங்க. அதுல ஒருத்தர் மிஷ்கின். மக்கள் பாக்க நல்ல படங்கள் எடுக்குறது இயக்குனர்கள் ஒரு வகை.அவங்க பாத்த நல்ல படங்களையே திரும்ப எடுக்குற இயக்குனர்கள் ஒருவகை.இயக்குனர் மிஷ்கின் ரெண்டாவதுவகை. அவர் பார்க்குற பிற மொழிப்படங்கள்ல அவருக்கு பிடிச்சதையெல்லாம் இறக்குமதிசெஞ்சி நம்மூர்ல படமாஎடுத்து நமக்கு போட்டுக்காட்டுவாரு.

மிஷ்கின் இதுவரை எடுத்த அனைத்து படங்களுமே வேற எதாவது ஒரு பட்த்துல இன்ஸ்பையர் ஆகி எடுத்ததுதான்.கிஹூஜூரோ, பேட் மேன், போன்ற படங்கள்ல இன்ஸ்பையர் ஆகி நந்தலாலா, முகமூடி போன்ற படங்கள நமக்குஎடுத்துக் காமிச்ச மாதிரி இந்த தடவ ஷெர்லாக் ஹோல்ம்ஸ் சீரிஸ்ல இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்ட படம் தான்துப்பறிவாளன். டிடெக்டிவ் ஷெர்லாக்கும் அவருடைய நண்பர் டாக்டர் வாட்சனும் துப்பறியும் கதைகள் மிகசுவாரஸ்யமானவை. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படங்கள் பல வந்திருந்தாலும் பெனடிக்ட் கும்பர்பேட்ச் நடித்த“ஷெர்லாக்” என்ற ஆங்கில சீரிஸ் மிகவும் பிரபலம். அதுலதான் நம்மாளு இப்ப இன்ஸ்பையர் ஆகிருக்காரு.என்னது காப்பின்னு சொல்லனுமா? அய்யய்யோ அப்டியெல்லாம் சொல்லக்கூடாது. காப்பின்னு நம்ம சொன்னாஅப்புறம் காப்பின்னா என்ன இன்ஸ்பிரேசன்னா என்ன, காப்பிக்கும் இன்ஸ்பிரேசனுக்கும் உள்ள வித்யாசம்என்னன்னு நமக்கு அரை மணி நேரம் விளக்கம்லாம் குடுப்பாங்க. ஏன் வம்பு.

எடுக்குற படம் ஒழுங்கா இருந்தா இன்ஸ்பையர் ஆனாலும் காப்பி அடிச்சாலும் நமக்கு எந்தப் பிரச்சனையும்இல்லை. சித்திரம் பேசுதடி நல்லாருந்துச்சி. நந்தலாலா நல்லாருந்துச்சி. ஆனா முகமூடிய கிரிஸ்டோஃபர்நொலனுக்கு போட்டுக்காமிச்சோம்னா அவன் நெஞ்சு வெடிச்சி செத்துருவான். அந்த அளவுக்கு இருந்துச்சி. இப்பஇந்த துப்பறிவாளன் எப்புடி இருந்துச்சின்னு பாப்போம்.

ஒண்றுக்கொண்று தொடர்பில்லாத மூணு சம்பவங்கள் ஆரம்பத்தில் நடக்க, தனியார் துப்பறிவாளரான கணியன் பூங்குன்றனும் அவரது நண்பனும் துப்பறியிறதுதான் படத்தோட கதை. துப்பறியும் கதைங்குறதால கதைக்குள்ள ரொம்ப டீப்பா உள்ள போகத் தேவையில்லை. துப்பறியும் காட்சிகள் விறுவிறுப்பை கூட்டுறதுக்கு பதிலா சொத சொதவென இழுக்குது. ஒரு க்ளூவிலிருந்து இன்னொரு க்ளூ.. அதை தொடர்ந்து போறப்போ தொடரும் கொலைகள்னு வழக்கமான அதே டெம்ப்ளேட் தான். சமீபத்துல வந்த குற்றம்  23 படத்துல வர்ற இன்வெஸ்டிகேஷன் காட்சிகள் ஏற்படுத்துன அளவு தாக்கத்துல பாதியை கூட இந்த துப்பறிவாளன் ஏற்படுத்தலன்னு சொல்லலாம்.

விஷால் பெரிய ப்ரில்லியண்டுங்க.. அவரு பயங்கரமா கேஸெல்லாம் சால்வ் பன்னிருவாருங்கன்னு படத்துல இருக்கவங்கதான் சொல்லிட்டு இருக்காங்களே தவற பாக்குற நமக்கு அப்டி ஒண்ணும் தெரியல. கடைசி வரைக்குமே அவரும் பெருசா எதுவும் பன்னல.

போக்கிரி தெலுங்கு ஒரிஜினல் வெர்ஷன்ல மகேஷ்பாபு ஒரு மாதிரி ரொம்ப கேஷூவலா இருக்க மாதிரி வசனம்பேசுவாரு. அதே மாதிரியே பன்றதா நினைச்சிக்கிட்டு விஜய் தமிழ்ல சளி புடிச்சவன் மாதிரி மூக்க உறிஞ்சி உறிஞ்சிபேசிக்கிட்டு இருந்தாரு. அந்தக்  கொடுமைதான் இந்த துப்பறிவாளன்லயும். ஷெர்லாக் சீரிஸ்ல ஷெர்லாக்காவர்றவன் ஒரு வித்யாசமான மாடுலேஷன்ல கடகடன்னு பேசிக்கிட்டே இருப்பான். அதயே விஷால பன்ன வைக்கமுயற்சி பன்னிருக்காரு மிஷ்கின். விளைவு… மேல கிரிஸ்டோஃபர் நொலனுக்கு முகமூடிய போட்டுக்காட்டுனாஎன்ன நடக்கும்னு சொன்னோமோ அதேதான் இப்ப ஷெர்லாக்குக்கும். விஷால் ஷெர்லாக் மாதிரி பேசுறேன்னு கொண்ணு எடுத்துருக்காப்ள.

அதுவும் விஷாலோட கெட்டப் இருக்கே… அபாரம். கவுண்டர் ஒரு படத்துல ”பிக்பாக்கெட் பெரியசாமி”ங்குற பேர்லகழுத்துல கர்சீஃப் கட்டிக்கிட்டு ஒரு மாதிரி சுத்துவாரு. அதே பிக்பாக்கெட் பெரியசாமி கெட்டப்ப விஷாலுக்குபோட்டுவிட்டு, ஷெர்லாக் சீரிஸ்ல நடிச்ச பெனடிக்ட் கும்பர்பேட்ச் போட்டுருக்க தொப்பிய மாட்டிவிட்டு, மிஷ்கின்நைட்டுல நடக்குற ப்ரஸ் மீட்டுலயெல்லாம் போட்டுருப்பாரே ஒரு கருப்பு கண்ணாடி.. அதயும் எடுத்து விஷாலுக்குபோட்டுவிட்டா டிடெக்டிவ் கணியன் பூங்குன்றனுக்கான கெட்டப் ரெடி. இந்த கெட்டப்பயெல்லாம் சேத்து மொத்தமாவிஷால பாக்குறப்போ ”ராஜா அண்ணாமலைபுரம் போறதுக்கு இது மூஞ்சி அல்ல.. கண்ணம்மா பேட்டை போறமூஞ்சிதான் இது”ன்னு கவுண்டர் ஒருத்தனப் பாத்து சொல்ற வசனம்தான் ஞாபகம் வந்துச்சி.


மொத்த படத்திற்கும் விஷாலின் இந்த கெட்டப்பும், அவரின் வசன உச்சரிப்புகளும் ஒரு மிகப்பெரிய மைனஸ்.அதுவும் ஹீரோயினிடம் விஷால் பேசுற விதம் ”என்ன இவன் வெறிநாய் கடிச்சமாதிரி பேசுறான்?” ன்னு நம்மகடுப்பாகுற அளவுக்கு எரிச்சல். எதோ வித்யாசமாக கூவ முயற்சி செஞ்சிருக்காங்க.

கேமராவ நேராப் பாத்து பேசுனா அவன் சாதா பூபதி… கேமராவுக்கு சைடுல பாத்து பேசுறவந்தான் ஆல்தோட்டபூபதி… படத்துல யாருமே கேமராவப் பாத்து பேசமாட்டேங்குறாங்க.  கலகலப்புபடத்துல இளவரசுவஓங்கிக் குத்திஅவரோட கழுத்த ஒருபக்கமா திருப்பிருவானுங்க. அதுக்கப்புறம் ஒரு சைடாவே பாத்துக்கிட்டு இருப்பாரு. விஷால்கழுத்தயும் எவனோ ஒருத்தன் அந்த மாதிரி திருப்பி விட்டுருக்கான்னு நினைக்கிறேன். பாடி நேரா இருக்கு கழுத்துமட்டும் எல்லா சீன்லயுமே சைடு வாங்கியிருக்கு. எந்த வசனம் பேசுறதா இருந்தாலும் “இரும்மா ஒரு பொசிசன்லபோய் நின்னுக்குறேன்”ன்னு ஒரு சுவத்து ஓரமாவோ இல்லை ஜன்னல் ஓரமாவோ போய் நின்னுட்டுதான்பேசுறாரு. மத்தவங்கள விடுங்க. ஒரு சின்னப்பையன் விஷாலப் பாக்க வருவான். அவன் கூட அப்டித்தான் எங்கயோ பாத்துபேசிக்கிட்டு இருக்காரு.

உன்னருகே நானிருந்தால் படத்து காமெடில விவேக் ரம்பாகிட்ட கோழி புடிக்கிற சீன விளக்கிட்டு இருக்கும்போதுரம்பா கடுப்பாகி “போன படத்துலயும் இதே சீன் தானே சார் இருந்துச்சி”ன்னுசொல்லும். உடனே விவேக் “அதுகோழி.. இது அதோட குஞ்சு… எனக்கு கோழி செண்டிமெண்டுங்குறது ரொம்ப முக்கியம்”ன்னுவாரு. அதே மாதிரிநம்ம மிஷ்கினுக்கு “மொட்டை” செண்டிமெண்டுங்குறது ரொம்ப முக்கியம் போல. ஒவ்வொரு படத்துலயும் வில்லன்குரூப்புல ஒரு மொட்டை வெட்டியா இங்கிட்டும் அங்கிட்டும் சுத்திகினு இருக்கான்.

ஒரு பதினைஞ்சி இருவது வருஷத்துக்கு முன்னால ஹீரோ கேஷூவலா சண்டை போடுற மாதிரி காட்ட ஃபைட்டுக்கு இடையில அவரு வேற எதாவது ஒண்ணு பண்ணிக்கிட்டு இருக்க மாதிரி காமிப்பாங்க. உதாரணமா ஜெமினி படத்துல காலேஜ் க்ளாஸ் ரூம்ல நடக்குற ஃபைட்டு ஒண்ணுல ரெண்டு பேர அடிச்சி வீசிட்டு மூணாவது ஆள் வர்ற கேப்புல விக்ரம் கைல வச்சிருக்க புத்தகத்த திறந்து படிப்பாரு. பழைய ரஜினி, ப்ரபு படங்கள்லயெல்லாம் இது மாதிரி காட்சிகள் நிறைய இருக்கும்.

அந்த மாதிரி வழக்கொழிஞ்சி போன சண்டைக்காட்சி ஒண்ணு இதுலயும். மவுத்தார்கண் வாசிச்சிக்கிட்டே விஷால் சண்டை போடுறாப்ள.. ஒவ்வொருத்தனையும் அடிச்சிட்டு கிடைக்கிற கேப்புல மவுத்தார்கன் வாசிக்கிறாரு. மவுத்தார்கன் வாசிச்சிக்கிட்டே ஒருத்தன் மவுத் ஆவப் போறான்னு நினைச்சி சிரிச்சிட்டு இருந்தேன். அதுக்கும் மேல க்ளைமாக்ஸ பெரிய துப்பாக்கி வச்சிருந்த வில்லன்கிட்ட ஒரு சின்ன செடியப் புடுங்கி சண்டை போடுவாரு பாருங்க… உலக அரங்கிலேயே இப்படி ஒரு சண்டையை ஒருவன் கூட வைத்ததில்லைன்னு மார்தட்டிச் சொல்லலாம். வாழப்பழத்த வச்சி வெட்டுன பர்னிங் ஸ்டார் சம்பூர்ணேஷயெல்லாம் தூக்கி கடாசிட்டாப்ள.

இப்பல்லாம் கிரீன் டீ குடிக்கிறத ரொம்பப் பெருமையா பல பேரு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அத கிண்டல் பன்றதுக்காகவா என்னனு தெரியல படத்துல ரெண்டு சீன்ல ஹீரோயின் குடுக்குற கிரீன் டீய குடிச்சிட்டு “இது கழுதை மூத்தரம் மாதிரி இருக்கு” “இது காண்டாமிருக மூத்தரம் மாதிரி இருக்கு”ன்னு விஷால் கமெண்ட் அடிக்கிறாரு.  ஒரு வேள ஹீரோயின் பதிலுக்கு “அது மாதிரி இல்ல சார்… அதேதான்”ன்னு சொல்லிருந்துச்சின்னா நிலமை என்னாயிருக்கும்?

”அஞ்சாதே” படத்து வில்லன் குரூப் டெம்ப்ளேட்ல ஆள மட்டும் மாத்தி துப்பறிவாளன்ல நடிக்கவச்சிருக்காரு.அதாவது பாண்டியராஜனுக்கு பதிலா பாக்கியராஜ்.. ப்ரசன்னாவுக்கு பதிலா வினய்.. மொட்டைக்கு பதிலா இன்னொருபுது மொட்டை. பாக்யராஜ் ஆளும் கெட்டப்பும் சிறப்பு. ஆனா ரெண்டு வார்த்தைக்கு மேல பேசுனா அவரு பழக்கதோஷத்துல “அய்யய்யோ”…. ”முருங்கக்கா” “கசமுசா” போன்ற வார்த்தைகள எதுவும் சொல்லிடப்போறாருன்னுபயந்து மணிரத்னம் பட ஹீரோக்கள் மாதிரி ஒரே ஒருவார்த்தை வசங்களத்தான் வச்சிருக்காங்க. அதே மாதிரிவினய்யும் ரெண்டு வார்த்தைக்கு மேல பேசுனா சவுக்கார்பேட்டை சேட்டு பசங்க வாடை அடிக்கும்னு அவருக்கும்அதே ஓரிரு வார்த்தை வசனங்கள்தான். எனக்குத் தெரிஞ்சி படத்துல அவரு பேசுன லென்த்தியான வசனம் “ஒருகாஃபி”

ஷெர்லாக் அருகிலிருக்கும் டாக்டர் வாட்சன் கேரக்டரில் ப்ரசன்னா. அனைத்து காட்சிகள்லயும் இருக்குறாருங்குறத் தவற வேற எதுவும் சொல்றதுக்கில்ல. என்னப் பொறுத்த அளவு விஷால் கேரக்டர்ல அவரு நடிச்சிருந்தா படம் நல்லா இருந்துருக்கும். விஷால் கேரக்டர்ல அவரு நடிச்சிருந்தா படத்த யாரு புரடியூஸ் பன்றதுன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது

மிஷ்கினோட அனைத்து படங்கள்லயும் ஒரே மாதிரியான காட்சிப்பதிவுகள் அலுக்குது. கதைக்களத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வெளிநாட்டு பாணி சண்டைக்காட்சிகள வைக்கிறது இந்தப் படத்துலயும் தொடருது.   முட்டிக்கு கீழ காலமட்டுமே காட்டிக்கிட்டு இருக்க காட்சிகள் இந்தப் படத்துல கொஞ்சம் கம்மி. பாடல்கள் இல்லாதது நிம்மதி. படத்துக்கு ப்ளஸ்ஸூன்னு பாத்த வெகு சில காட்சிகள சொல்லலாம்.

கதை அளவுல பெரிய குறை இல்லன்னாலும் ஒரு துப்பறியும் படத்துக்கு உண்டான விறுவிறுப்பை இந்தப் படம் நமக்குத் தர மறுக்குது. விஷாலோட பாத்திரப்படைப்பும் அவரோட வசன உச்சரிப்பும்தான் இதுக்கு முக்கியக் காரணம். மொத்தத்துல நம்ம மனசு ஆறுதலுக்கு ஒரு தடவ பாக்கலாம்னு வேணா சொல்லிக்கலாம்.

மிஷ்கின் சார் கிட்ட ஏன் இந்த மாதிரி வெளிநாட்டுப்படங்கள பாத்து அதயே இங்க எடுக்குறீங்கன்னு கேட்டா “நான் பார்த்த நல்ல படங்கள் நம் மக்களையும் போய் சேர வேண்டும்”னு கதை விடுவாரு. மிஷ்கின் சார்.. இனிமே உங்களுக்கு எதாவது வெளிநாட்டுப்படங்கள் புடிச்சிதுன்னு வைங்க… அந்தப் படத்துப் பேர மட்டும் சொல்லுங்க.. நேரடியா நாங்களே பாத்துக்குறோம்… கழுதைய ஏன் நீங்க வேற அதயே திரும்ப எடுத்துக்கிட்டு… உங்களுக்கும் நேரம் மிச்சம் எங்களுக்கும் நேரம் மிச்சம்… !!!


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

ஜீவி said...

கரெக்ட் சார் . நீங்க ஏற்கனவே சொன்ன மாதிரி படத்து கதாபாத்திரங்களின் பதட்டம் பாக்குறவங்களையும் தொத்திக்கிட்டா அது வெற்றி... இங்க அது மாதிரி எதுவும் இல்லை. ஏதோ மின்னல் மாதிரி வச்சு யாரையோ கொல்றாங்க.. பல இடங்களில் புரியலை. நீங்க ஒரு வார்த்தை சிம்ரன் ஆண்ட்டி பத்தி சொல்லிருக்கலாம்.. பாவம் சிம்ரன். ரெண்டே ரெண்டு சீன்

Anonymous said...

KOOMUDDAI RAJINI BADATHUKKU MYSKIN PADAM 200% BETTER

சிவா said...

ஹிரோயினி குத்துயுரும் கொலையுருமா கிடக்கும் போது ஆம்புலன்ஸை கூப்பிடாம வசனம் பேசியே அவுங்க சோலிய முடிச்சர்றாரு விசால்! என்னத்தை படம் எடுக்குறாங்களே சே!

ஜீவி said...

ஆமாம் ஆமாம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...