Friday, January 12, 2018

பவன் கல்யாணின் Agnyaathavaasi !!!


Share/Bookmark
வழக்கமா தேவி மல்டிப்பள்க்ஸ்ல உள்ள போகும்போதே செக்யூரிட்டி செக் பண்ணி எந்தப் படம்னு கேட்டு  மேல போங்க, கீழ போங்க , சைடுல போங்கன்னு வழி சொல்லுவாங்க. தெலுங்குப் படங்களா இருந்தா பெரும்பாலும் படம் பேர சொல்லாம “தெலுங்குப் படமா?”ன்னு கேட்டு வழி சொல்லுவாங்க. நேத்து உள்ள போகும்போது தெலுங்குப் படமான்னு கூட கேக்கல.. மூஞ்ச ஒரு மாதிரி வச்சிக்கிட்டு “பவர் ஸ்டாரா? இப்டி சைடுல போங்க”ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. யோவ் என்னய்யா எதோ நம்ம ஊரு பவர் ஸ்டார சொல்ற மாதிரி மூஞ்ச இவ்வளவு சுழிச்சிக்கிற… சரி அவரு ரேஞ்சு இவங்களுக்கு தெரிய வாய்ப்பில்ல” ன்னு நினைச்சிக்கிட்டு உள்ள போனேன்.

உள்ள போய் சீட்டுல உக்காந்தேன்.  திடீர்னு பக்கத்து சீட்டுல எதோ சத்தம். பக்கத்துல உக்காந்திருந்தவன் கழுத்துல கைய வைச்சிக்கிட்டு “ஹாங்,….” ஹாங்… “ “ஹாங்…” ன்னுட்டுருந்தான். அய்ய்ய்யொ வலிப்பு வந்துருச்சி போலயேன்னு பதறிப்போயி சாவி கொத்த அவன் கையில வச்சி திணிச்சேன். உடனே நிறுத்திட்டு “யோவ் என்ன பன்ற?”ன்னான். “டேய் உனக்கு வலிப்பு வந்து இழுத்துக்கிட்டு இருந்த… காப்பாத்தலாமேன்னு கையில சாவிக்கொத்த வச்சேன்”ன்னேன். “Yo bro.. இது பவன் கல்யாணோட மேனரிசம் ப்ரோ.. நா அவரோட டை ஹார்டு ஃபேன்.. அதான் அவர மாதிரி செஞ்சி பாத்துக்கிட்டு இருந்தேன்”ன்னான். சொல்லிட்டு பன்னுங்கடா.. டக்குன்னு பாத்தா கழுத்து வலியோட கக்கா போக முக்குற மாதிரியே இருக்குன்னு சொல்லிட்டு படம் பாக்க ஆரம்பிச்சேன்.  

பொதுவா சில இயக்குனர்கள் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படத்த கொடுத்தப்புறம், அந்த வெற்றிப்படம் கொடுத்த தாக்கத்துலருந்து மீண்டு  வர்றதுக்கு அவங்களுக்கு ரொம்ப நாள் ஆகுது. பாட்ஷா எடுத்து இத்தனைவ் வருஷம் ஆகியும் சுரேஷ் கிருஷ்ணாவால அதுலருந்து இன்னும் மீள முடியல. பாட்ஷாவுக்கப்புறம் அவர் எடுத்த பெரும்பாலான படங்கள்ல பாட்ஷாவின் அதே தாக்கம்.

அந்த வரிசையில ஒரு இயக்குனர்தான் திரிவிக்ரம். 2013 ல அவரோட இயக்கத்துல பவன் கல்யாண் நடிச்ச ”அத்தாரிண்டிக்கி தாரெதி” (அத்தை வீட்டுக்கு வழி எது?) தாறுமாறான ஹிட். தென்னிந்திய திரைப்பட வசூல் சாதனைகள் பலவற்றை தகர்த்தெரிஞ்ச படம். அந்தப் படத்துக்கப்புறம் அவர் எடுத்திருக்க மூணாவது  படம் இந்த அக்ஞாதவாசி. கிட்டத்தட்ட அதே அத்தாரிண்டிக்கி தாரெதி படத்துல ஒருசில கேரக்டர்கள் மட்டும் மாத்தி அதயே திரும்ப எடுத்ததுதான் இந்த அக்ஞாதவாசி.

இந்த அத்தாரிண்டிக்கி தாரெதி படத்த கிட்டத்தட்ட ஒரு பதினைஞ்சி இருவது தடவ பாத்துருப்பேன். சும்மா சாப்பிடும்போது ஒரு சீன் பாப்போம்னு போட்டா அப்டியே தொடர்ந்து படம் முடியிற வரைக்கும் பாக்க வச்சிடும். அந்த அளவுக்கு சூப்பாரான ஸ்க்ரிப்ட், காமெடி, வசனங்கள்ன்னு எல்லாமே பர்ஃபெக்ட்டா கலந்த படம். ஆனா இந்த அக்ஞாதவாசி அப்டியே பேங்ளூருக்கு நேர் எதிர்த்தாப்ள உள்ள ஏர்காடு மாதிரி. ஒரு சீன் கூட நல்லா இல்லை. ஒரு காமெடிக்கு கூட சிரிப்பு வரல. இதுல பவன் கல்யாணுக்கு அம்மா குஷ்பூன்னு காமிச்ச உடனே எனக்கு டபீர்னு வெடிச்சிருச்சி. அப்புறம் அம்மா இல்ல சின்னம்மான்னு சொல்லி தண்ணி தெளிச்சி எழுப்புனாங்க.

நம்மல்லாம் ball ah வச்சித்தான் பவுலிங் போடுவோம். ஆனா தெலுங்கு ஹீரோக்கள்லாம் ஆளவச்சே பவுலிங்க் போடுவாங்க. ஓங்கி ஒரு அடி அடிச்சா அடி வாங்குனவன் அப்டியே தரையில ஒரு பிட்ச் குத்தி பவுண்ஸ் ஆகி அந்தப் பக்கம் போய் விழுவான். அது மட்டும் இல்லாம இன்ஸ்விங், அவுட் ஸ்விங்குன்னு அடிக்கிற ஆளப் பொறுத்து  ஆளுங்க வித விதமா விழுவானுங்க.

மத்த தெலுங்கு ஹீரோக்களோட படங்கள விட பவன் கல்யாணோட படம் கொஞ்சம் வித்யாசப்பட்டு தான் இருக்கும். மொரட்டுத்தனமால்லாம் போட்டு ஆளுங்கள அடிக்க மாட்டாரு. ஃபைட்டெல்லாம் கொஞ்சம் ஸ்டைலிஷா தான் இருக்கும். இந்தப் படத்துலயும் அப்டித்தான். ஆனா நிறைய பெசல் அய்ட்டங்கள் இருக்கு. ஒருத்தன் வாயில குத்துவாரு.. அவன் பல்லு தெறிச்சி வெளில வந்து இவரோட கத்தில பட்டு ரெண்டு பாதியா போகும்.

தெலுங்கு படங்கள் மொக்கையா இருந்தாலும் பாட்டுங்கல்லாம் எப்பவும் நல்லா எடுப்பாங்க. ஆனா இதுல மீசிக்கு நம்ம ரூத்து.  பாட்டு பாடச் சொன்னா அவர் பாட்டுக்கு எதோ பாடிக்கிட்டு இருக்காரு. என்னக் கருமம்டா இதுன்னு தோணுச்சி. இதுல இந்த ஆல்பம் வேற செம ஹிட்டாம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சூரி சொல்றமாதிரி “இப்பதான் மாப்ள புதுசா கேக்குறாய்ங்க... போகப் போக கேட்டுட்டுச் செத்துருவாய்ங்க” ன்னு நினைச்சிக்கிட்டேன்.

படம் முடிஞ்சி கெளம்பப் போறப்போ திரும்பவும் எதோ சத்தம். என்னன்னு பாத்தா அந்தப் பக்கத்துல இருந்தவன் அதே மாதிரி கழுத்துல கைய வச்சிக்கிட்டு “ஹாங்…” “ஹாங்” ன்ன்னுட்டுருந்தான். “டேய் இன்னும் உன் மேனிரிசம் முடியலயா… எந்திரிச்சி போடா”ன்னு சொல்ல திரும்பிப்பாத்தா வாயில நொறை தள்ளுற அளவுக்கு வெட்டுது.  

காது ரெண்டயும் கவுண்டர் மாதிரி பொத்துனாப்புல புடிச்சிக்கிட்டு வெளில வந்தா, “பவர்ஸ்டார் படமா”ன்னு எகத்தாளமா கேட்ட செக்யூரிட்டி எதிர்க்க நின்னு லேசா ஒரு சிரிப்பு சிரிசாரு… ”தெய்வம்ணே நீங்க” அப்டின்னு ஒரு கும்புடப்போட்டுட்டு திரும்பிப் பாக்காம வீடு வந்து சேந்தேன்.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...