Wednesday, June 8, 2011

சில தலைவர் படங்களும் சில தலைவர்களும்


Share/Bookmark
இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல


சில தலைவர் படங்களோட சீன்ஸ்ல இப்போ இருக்க அரசியல்வாதிகள் சிலர்
நடிச்சிருந்தா எப்புடி இருந்துருக்கும்னு ஒரு கற்பனை..

1. சிவாஜி- The Boss -Interval Scene:




ரஜினியாக கலைஞர், ஆதிசேஷனாக அம்மா, விவேக்காக க.அன்பழகன்.

அம்மா: என்னங்க கலைஞரே இப்புடி ஆயிபோச்சு... படுபாவி பசங்க உங்கள
இந்த நெலைமைக்கு ஆளாக்கிட்டாங்களே..
ஆமா இனிமே நீங்க என்ன பண்ணுவீங்க கலைஞர்? 
கட்சி நடத்துவீங்களா? பாராட்டு விழா நடத்துவீங்களா?
சினிமாவுக்கு கதை எழுதுவீங்களா? நா வேணா தினத்தந்தில சொல்லி உங்களுக்கு ரிப்போட்டர் வேலை வாங்கி தரட்டுமா?

அய்யயோ அதுக்கெல்லாம் முன்னனுபவம் வேணுமே!! ஹ்ம்ம்ம். உக்காந்த எடத்துலையே நோகாம நோம்பு கும்புடுற வேல ஒண்ணு இருக்கு பாக்குறீங்களா?

அதான்,,,, ரொம்ப ஈசியான தொழில்..(ஒரு பேனா ரீஃபில கையில வச்சி) எதாவது கடையில கணக்கெழுதி  பொழைச்சிக்கோ.... ன்னு சொல்லிட்டு அம்மா சிரிச்சிட்டு போயிடுறாங்க..

கலைஞர் சோகமான BGM oda  அறிவாலையத்துல உக்காந்து அந்த ரீஃபில மேலையும் கீழையும் திருப்பி திருப்பி பாக்குறாறு..

(அப்போ கலைஞரோட சோகத்த புரிஞ்சிகிட்ட அன்பழகன்)

என்னதான் Parker பேனாவுல எழுதுனாலும் இந்த ரீஃபில்ல எழுதுற சொகமே
சொகம்தான் கருணா...

(கலைஞர் அப்பவும் சோகமாவே இருக்க)

க.அன்பழகன்: நீ பேசாம திருவாரூருக்கே போயிரு கருணா.....

கலைஞர்: 
இதுதான் என் ஊரு... இதவிட்டுட்டு நா எங்கேடா போவேன்.. இதுக்கு
நல்லது செய்யாம விடமாட்டேன்..

க.அன்பழகன்: எப்புடி?

கலைஞர்:
இந்த ரீஃபில வச்சித்தான்...இந்த ரீஃபில மேல தூக்கி போடுறேன். அது திரும்ப கீழ வந்துருச்சின்னா பூ பாதை.. அப்புடியே மேலையே போயிருச்சின்னா புஷ்ப பாதை.என் முடிவை கடவுளோ தற்செயலோ இது தீர்மானிக்கட்டும்..

க.அன்பழகன்: ???????!!!!!!

கலைஞர் ரீபிலை மேல தூக்கி போட அது திரும்ப அவரு கால்கிட்டயே விழுது. அதஎடுத்து கையில வச்சி, ஒரு உறுமு உறுமிட்டு

"இனி நா போற பாதை... (வழக்கம்போல) அதே பாதை"

அந்த ரீஃபில லெப்ல ஒரு தடவ ரைட்டுல ஒரு தடவ தூக்கி போட்டு மேல போடுறாருஅது அப்புடியே அவரு பாக்கெட்டுல போய் விழுது... அப்புடியே தலைய ஒரு சிலுப்பு சிலுப்ப, கலைஞர் Hair style um (??!!) மாறிடுது..

அண்ணாமலை சவால் சீன்:




ரஜினியாக விஜய்காந்த், சரத்பாவுவாக வடிவேல், ராதா ரவியாக அழகிரி

கேப்டன் hi pitch la கத்திகிட்டே வர்றாரு....

கேப்டன்:
வடிவேல்,..... வடிவேல்ல்ல்ல்ல்.......

வடிவேலு : மாடியிலருந்து ( என்ன காட்டெருமை மழையில நனைஞ்சி வந்து நிக்கிது)என்ன விஷயம்?

கேப்டன்: என்ன விஷயம்னா கேக்குற? எதோ ஆத்துறத்துல உன்ன ரெண்டு அப்பு அப்பிட்டேன்.. அதுக்கு,என்ன ரூமுக்குள்ள போட்டு நாலு மிதி மிதிச்சிருக்கலாம்மூஞ்சில காரி துப்பிருக்கலாம். ஆனா அத விட்டுட்டு ஊருக்குள்ள என் இமேஜ காலி பண்ணிட்டியேடா பாவி...

வடிவேலு:
இத பாரு... உன் இமேஜ டேமேஜ் பண்ண வேண்டிய நெலமை பண்ணியாச்சி அதுக்கு உனக்கு என்ன நஷ்ட ஈடு வேணுமோ வாங்கிக்க...

கேப்டன்: நஷ்ட ஈடு வேணுமான்னா கேக்குற.. 50 படத்துல கஷ்டப்பட்டு போலீசாநடிச்சி கேப்டன்னு form ஆன பேர ஓரே நாள்ல காலி பண்ணியே.. அத திருப்பி குடு.. (இடி இடிக்குது) நா தண்ணியடிச்சத ஊருக்குள்ள சொல்லி என்ன மாதிரியே பேசி நா ஹாஃப் அடிச்சி  ஏத்துன போதைய, எனக்கு ஆப்படிச்சி உடனே எறக்குனியே அத திருப்பி குடு. இதுக்கெல்லாம் நஷ்ட ஈடு குடுக்க முடியுமா உன்னால?

வடிவேலு:
ஒரு ஊரு பாக்க உன்னபத்தி பேசுனதுக்கே இப்புடி பேசுறியே, உலமெல்லாம் பாக்குற சினிமால அத்தன பேருக்கு முன்னாடி என்ன பொளிச்சி பொளிச்சின்னு அடிச்சி அசிங்கப்படுத்துனியே அந்த மரியாதைய திருப்பி  தர முடியுமா உன்னால?

கேப்டன்: நானாவது உன் கன்னத்துலதான் அடிச்சேன். நீ என் வாழ்க்கையிலயே
அடிச்சிட்டியே...

அழகிரி:
நிறுத்துய்யா...இவரு பெரிய British இளவரசரு.. இவர எல்லாருக்கும்
முன்னாடி அசிங்கப்படுத்திட்டோம்... நீ மட்டும் அந்த அம்மா கூட சேந்துக்கிட்டு
எங்கள பத்தி தப்பு தப்பா பேசலாயா.... நானும் பாத்துகிட்டே இருக்கேன்... பேசிகிட்டே போற... போவியா...

கேப்டன்:
போறேன்... போறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லிட்டு போறேன்... இன்னிக்குஉங்களுக்கு காமெடி நல்லா வருதுங்கறதுக்குகாக என்னவச்சி காமெடி பண்ணி என்ன அசிங்கப்படுத்தி எனக்குள்ள தூங்கிட்டு இருந்த காமெடியன தட்டி எழுப்பிட்டீங்க..வடிவேல்ல்ல்ல்ல்ல்.... இதுவரைக்கும் இந்த கேப்டன நீ ஹீரோவாதான் பாத்துருப்ப.. இனிமே இந்த கேப்டன கமெடியனா பாப்ப...இந்த நாள்........... உன்னுடைய காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ.... இன்னிலருந்து உன்னோட அழிவுகாலாம் ஆரம்பமாயிருச்சி.. எனக்கும் உனக்கும் காமெடி யுத்தம் தொடங்கிருச்சி..

இந்த யுத்தத்துல நா உன்னவிட நெறைய காமெடி சீன்கள்ல நடிச்சி, பல மிமிக்ரி வாய்ஸ் ட்ரை பண்ணி, உன்னோட முன்னேற்றத்த தடுத்து நிறுத்தி உன் காமெடி வெறிய ஒழிச்சி கட்டி, நீ எப்டி நா தண்ணியடிச்சத ஊருக்கெல்லாம் சொல்லிக்காட்டி என்ன அசிங்கப்படுத்துனியோ அதே மாதிரி நீ பக்கத்து வீட்டு ஆண்டி கூட "தண்ணி" அடிக்கிறத நா எல்லாருக்கும் நடிச்சி காட்ட்ல இந்த காந்த்.. விஜயகாந்தே இல்லடா

(டான் டடட டட்டான் டான் டடட டட்டான் டான் டடட டட்டான்) கேப்டன்
ரொம்ப கஷ்டப்பட்டு வேகமா நடந்து போறாரு.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

கிரி said...

ஹா ஹா செம காமெடிங்க.

சக்தி கல்வி மையம் said...

அருமையான கற்பனை..

தனி காட்டு ராஜா said...

:))

Faizal said...

களக்கிடீங்க .. .. ..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...