Saturday, February 14, 2015

அனேகன் – ஆப்பொனென்ட்டா ஆளே இல்ல சோலோவாயிட்டான்!!!


Share/Bookmark
மற்றான் அவ்வளவு சிறப்பாக போகாத நிலையில் இயக்குனர் கே.வி.ஆனந்த் தனுஷை வைத்து எடுத்திருக்கும் அடுத்த படம் இந்த அனேகன். கே.வி.ஆனந்த் படம் என்றாலே விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே உடல் முழுக்க விறுவிறு என்று இருந்தது. பிறகுதான் கவனித்தேன். தெரியாத்தனமாக தியேட்டர் ஃப்ளோர் லைட்டில் கால்வைத்ததால் கரண்ட் ஷாக் அடித்து விறுவிறு என்று இருந்ததை. தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். அருமையாக நடித்திருக்கிறார்.

கே.வி.ஆனந்த் படம் என்றாலே ஹாரிஸ் ஜெயராஜ் தான் மீசிக் போடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நன்றாக மீசிக் போட்டிருக்கிறார். ஹீரோயினும் அழகாக இருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். வில்லனும் நன்றாக இருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். எல்லாமே நன்றாகவே இருக்கிறது. கதையும் அருமையாக இருக்கிறது. கேவி ஆனந்தின் இந்தப் படம் தமிழ் திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி என்று சொன்னால் அது மிகையாகாது.

திரைக்கதையில் ஒருசில குழப்பங்களை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில் அனேகன் நல்லாருக்குன்னும் சொல்லமுடியாது நல்லா இல்லைன்னும் சொல்ல முடியாது. நீங்க பாக்கலாம்னும் சொல்ல முடியாது நீங்க பாக்கக் கூடாதுன்னும் சொல்ல முடியாது. நீங்க படத்துக்கு போனாலும் போங்க. போகலன்னாலும் இருங்க. ரேட்டிங்க் அஞ்சுக்கு மூணே கால். நன்றி வணக்கம்.

நேத்து வரைக்கும் நல்லாத்தானய்யா இருந்தான். திடீர்னு மெண்டல் ஆயிட்டானேய்யான்னு தானே வெறிக்கிறீங்க. அட ஒண்ணுமில்லையப்பா. சும்மா ஒரு நடுநிலை விமர்சனம்னு சொல்லுவாங்கல்ல. அதத்தான் எழுதிப்பாத்தேன். அதுக்கெல்லாம் நாம சரிப்பட்டு வரமாட்டோம்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். சரி வாங்க டங்காமாறியப் பத்தி பாப்போம்.

சமீபத்திய பெரிய பெரிய ஏமாற்றங்களால கடுப்பாயிருக்க நம்மூர் ரசிகர்களை ஓரளவுக்கு ஆறுதல் படுத்துற மாதிரி வந்துருக்க படம் தான் நம்ம அனேகன். ரொம்பவே வித்யாசமான கதைக்களம். ரெண்டு மூணு வித்யாசமான காலகட்டத்துல நடக்குற கதைகள். ரொம்ப நாளா படப்பிடிப்புல இருந்தாலும் அதற்கேத்த பலன் கண்டிப்பா கிடைச்சிருக்குன்னு சொல்லலாம்.

வழக்கமா இந்த த்ரில்லர் படங்களைப் பத்தி சொல்லும்போது “இந்த சீட்டு நுனியில உக்கார வச்ச படம்” அப்டின்னு குறிப்பிட்டு சொல்லுவாங்க. அந்த சீட்டு நுனி மொமெண்ட்ட இதுவரைக்கும் நா ஒரே ஒரு படத்துலதான் முழுமையா உணர்ந்திருக்கேன். அது ரத்தச் சரித்திரம்-2 வோட க்ளைமாக்ஸ். எத்தனை பேரு அந்தப் படத்த தியேட்டர்ல பாத்தப்போ ஃபீல் பண்ணீங்கன்னு தெரியல. ஆனா என்ன நடக்கப்போவுது, எவனோ எவனையோ கொல்லப்போறான். ஆனா அது யார்னு தெரியாது. ஒவ்வொருத்தனை நோக்கியும் கேமரா ஸ்லோமோஷன்ல போகவும், அதுக்கேத்த மியூசிக்கும் சேந்து யப்பா.. அந்த ஃபீல் கிட்டத்தட்ட அதுக்கப்புறம் எந்த படத்துலயுமே எனக்கு கிடைச்சதில்லை.

ஆனா அனேகனோட முதல் சீன்ல அந்த எஃபெக்ட ஒரு பாதியையாவது ஃபீல் பண்ணேன். முதல் இருபது நிமிஷமே எதோ க்ளைமாக்ஸ் பாக்குற மாதிரி எல்லாரையும் படத்துக்குள்ள இழுத்து கட்டிப்போட்டுருது.  என்னதான் ஹாரிஸ் ஜெயராஜ திட்டுனாலும் சில இடங்கள்ல பாராட்டத்தான் வேண்டியிருக்கு. அந்த முதல் சீன்ல கேமரா, மீயூசிக்கு, ஸ்பெஷல் எஃபெக்ட்டுன்னு எல்லாமே பூந்து விளையாடுருக்காய்ங்க.

மூணா ரூனாவாக வரும் தனுஷ் கொஞ்ச நேரத்தில் அஷ்விங்குற சாஃப்ட்வேர் பையனாக மாறுறாரு. கே.வி.ஆனந்தும் “அஷ்வின்”ங்குற பேர் செண்டிமெண்ட புதுசா புடிச்சிருக்காப்ள போல. முதல் பாதி முழுக்க படம் இண்ட்ரஸ்டிங்கா போயிகிட்டு இருந்தாலும் நம்ம மனசு வேற எதையோ எதிர்பாத்துக்கிட்டே இருக்கு. என்னன்னு பாத்தா வேறொன்னும் இல்லை. டங்காமாறியத்தான்.

எப்படா போடுவாய்ங்க. எப்படா அந்த தனுஷ் வருவான்னு எதிர்பார்க்க வைச்சே படத்த நகர்த்திருக்காங்க. ஏழாம் அறிவு படத்துல முருகதாஸ் பன்ன தப்ப இங்க கேவி ஆனந்த் பன்னல. ஏழாம் அறிவுல போதிதர்மன் செக்மெண்ட்ட இண்டர்வல் ப்ளாக்குல மட்டும் வச்சிருந்தா அந்தப் படத்தோட ரேஞ்சே வேற. போர் அடிக்கிறதே தெரிஞ்சிருக்காது.

டங்காமாறிய பதுக்கி வச்சி, பின்னால காளிங்குற தனுஷ் கேரக்டர் எண்ட்ரிய பாக்கும்போது என்னையும் அறியாம புல்லரிச்சிருச்சி. படத்துக்கு வந்த பாதிபேர் அந்தப் பாட்டுக்காகத் தான் வந்துருப்பாய்ங்க போல. செம சவுண்டு. தனுஷ் எல்லா கேரக்டருக்குமே செமையா செட்டாயிருக்காரு. குறிப்பா காளிங்குற கேரக்டர்.

பொதுவா நம்ம படங்கள்ல கதை மொத்தமும் ஹீரோவ மையமா வச்சே நகரும். ஆனா இங்க கொஞ்சம் வித்யாசம். மொத்தக் கதையும் ஹீரோயின மையமா வச்சி நகருது. செம்ம அழகு. அதுவும் அந்தப் புள்ள உம்மா குடுக்குற அழகே தனி.  அப்டிப்பட்ட அழகு தேவதைக்கு அவங்க அப்பா இடுப்புல அயன் பாக்ஸான சூடு வைக்கும்போது, எதோ நமக்கே சூடு வச்சா மாதிரி ஒரு ஃபீல்.

மாஞ்சா வேலுவுக்கு அப்புறம் மறுபடியும் நவரச நாயகன். நவரசத்துல ரெண்டு மூணு ரசத்த தான் கேவி ஆனந்த் யூஸ் பண்ணிருக்காரு. முதல் பாதி முழுக்க டம்மியா வந்துட்டு போனாலும் கடைசில ஒரே சீன்ல கார்த்திக் மொத்தமா தனுஷ தூக்கி சாப்டுறாரு. கார்த்திக் இங்க்லீஷ் பின்னி பெடல் எடுக்குறாப்ள.

படத்தோட வில்லன் கேரக்டரும் நல்லாருக்கு. வழக்கமா ஹீரோவும் வில்லனும் சண்டை போட்டா, வில்லன் ஹீரோவ அடிக்கும்போது நமக்கு வில்லன் மேல செம வெறி வரும். ஹீரோதான் ஜெயிக்கனும்னு நம்ம மனசுக்கு தோணும். ஆனா இந்தப் படத்து க்ளைமாக்ஸ்ல ஹீரோவும் வில்லனும் சண்டை போடுறாங்க. ஆனா வில்லன் ஹீரோவ அடிக்கும்போது வில்லன் மேல நமக்கு கோவம் வராது.  வில்லன் ஜெயிச்சா நல்லாருக்கும்னு உள்ளுக்குள்ள கொஞ்சமாவது தோணும். எனக்கு அப்டிதான் தோணுச்சி. வேற யாருக்காவது தோணுச்சின்னா சொல்லுங்க J

ஆனா படத்தோட க்ளைமாக்ஸ், மஹதீரா படத்து க்ளைமாக்ஸ ஏழாம் அறிவு க்ளைமாக்ஸ் எடுத்த லொக்கேஷன்ல எடுத்தா மாதிரி இருக்கு. படத்துல நெகடிவ்னா ஒரு சில விஷயங்களை சொல்லலாம். தனுஷ் அஷ்வின் கேரக்டரா வரும்போது, ஒருசில காட்சிகள் லேசா போரடிக்கிது. ”தொடுவானம் தொலைகிற நேரம்”ன்னு ஷங்கர் மஹா தேவன் பாடுன ஒரு பாட்டை விஷுவல்ல கெடுத்து வச்சிருக்காய்ங்க. தனுஷ் கெட்டப் அந்த பாட்டுல செம்ம காமெடி. அஷ்வின் கேரக்டர்ல வர்ற தனுஷுக்கு காஸ்ட்யூம் சற்று டொம்மை போல இருக்கு. அதப்பாக்க தனுஷ் மாதிரியே இல்லை. கோ  படத்து ஜீவா மாதிரி, எதோ துணிக்கடை பொம்மை மாதிரி இருக்காரு. அப்புறம் நிறைய விஷயங்களுக்கு படத்துல explanation eh குடுக்காம படத்த படக்குன்னு முடிச்சிடுறாங்க.


இந்தப்படம் கண்டிப்பா கேவி ஆனந்தோட கம்பேக் படம் தான். கதையிலயும், சரி திரைக்கதையிலயும் ரொம்ப கவனமாவே இருந்துருக்காரு. இடையில திடீர்ன்னு இன்ஸ்பெக்டர் கோபிநாத்ன்னு ராஜேஷ்குமார் நாவல்ல வர்ற மாதிரி க்ரைம் இன்வெஸ்டிகேஷன்லாம் வருது. எவனும் கேஸ் போடாம இருந்தா சரி. மொத்தத்தில் அனேகன்,  கண்டிப்பா பாக்கலாம். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...