Monday, June 27, 2016

வீரம்னா என்னன்னு தெரியுமா?!!


Share/Bookmark
ஒரு வருஷம் முன்னால ஒரு ATM ல பணம் எடுத்த ஒரு பொண்ண தலையில வெட்டி ஒருத்தன் பணத்த புடுங்கிட்டு போன ஒரு வீடியோவ பாத்தோம். ஆறு மாசத்துக்கு முன்னால அண்ணா நகர் சூப்பர் மார்க்கெட்டுக்குள்ள புகுந்து அங்க வேலை பாக்குற பொண்ணை ஒருத்தன் கத்தியால குத்திக் கொல்லுற வீடியோவயும் பாத்தோம். ஒவ்வொரு காலகட்டத்துலயும் வெவ்வேறு சூழல்ல இந்த மாதிரி உயிரோட மதிப்பு தெரியாத சைக்கோக்கள் உருவாகிக்கிட்டு தான் இருக்காங்க. ஒவ்வொரு தடவயும் இந்த மாதிரி சம்பவங்கள் எதிர்கட்சிகள் ஆளும்கட்சியை சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு பழி சொல்றதுக்கும், சில வலைத்தள உத்தமர்களுக்கு ரெண்டு நாள் பொழுது போக்குறதுக்கு மட்டுமே பயன்படுதே வேற எதுக்கும் இல்லை.

சமூக வலைத்தளங்கள் எதை உருவாக்கியிருக்கோ இல்லையோ நிறைய போலி முகமூடிகளை நிச்சயமா உருவாக்கியிருக்கு. நிதர்சனம் என்ன என்பதை மறந்து வீட்டுல உக்காந்துகிட்டு என்ன வேணாலும் பேசலாம்ங்குற நிலமைதான் இப்பல்லாம். ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு மட்டுமே சமூக அக்கரை, சக்கரையெல்லாம் இருக்கமாதிரியும் மத்தவனுங்கல்லாம் மனிதாபிமானம்னா என்னன்னு கூட கூடத் தெரியாத அற்பப் பதர்களாகவும் தான் நினைச்சிக்கிட்டு இருக்காய்ங்க.  நங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல ஸ்வாதி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட வெறிச்செயலுக்கு வழக்கம் போல நமது போராளிகளின் ரியாக்‌ஷன தான் நா சொல்ல வந்தது.

நுங்கம்பாக்கத்துல நடந்தது ஒரு கொடூரச் செயல்ங்குறதுல எந்த சந்தேகமும் இல்லை. இப்பவரைக்கும் கொலை பன்னவன கண்டுபுடிக்கல. ஸ்டேஷன்ல CCTV கேமரா இல்லை. வழில இருந்த வேற ஒரு கேமரா ஃபுட்டேஜ வச்சித்தான் தேட ஆரம்பிச்சிருக்கானுங்க. போதிய பாதுகாப்பு, கண்காணிப்பு வசதிகள் இல்லைன்னு அரசாங்கத்த திட்டுறீங்க.. திட்டுங்க… அதுக்கெல்லாம் பொங்குறதுல தப்பே இல்லை.

ஆனா அங்க நின்ன மக்கள் அவன புடிக்கலைன்னும், சுவாதிய காப்பாத்தலைன்னும், “நா மட்டும் அங்க இருந்துருந்தா என்ன பன்னிருப்பேன்னு தெரியுமா?” ன்னும் அவனவன் அளந்து விட்டுக்கிட்டு இருக்கானுங்க. “முதுகெலும்பு இல்லாமல் இவர்களைப் போல் வாழ்வதை விட சாவதே மேல்” “கொலை செய்தவனை விட இவர்கள்தான் பாவிகள்” ன்னு லைட்டா எழுதத் தெரிஞ்சவன் கூட எதுகை மோனைல திட்டிக்கிட்டு இருக்கானுங்க. அதுவும் குறிப்பா சென்னையில இருக்கவன்லாம் தொடை நடுங்கிகளாம். இவனுங்க இருந்தா கிழிச்சிருப்பானுங்களாம்.

நா தெரியாமத்தான் கேக்குறேன் சென்னைய விடுங்க. சென்னை தவிற தமிழ்நாட்டுல இதுவரைக்கும் எத்தனை தடவை இந்த மாதிரி பொது இடங்கள்ல மனிதர்களை வெட்டிக் கொல்லுற சம்பவங்கள் நடந்துருக்கு. அதுல இதுவரைக்கும் எதாவது ஒரு சம்பவமாவது பொதுமக்களால தடுக்கப்பட்டுச்சின்னு நாம படிச்சிருக்கோமா? இல்லவே இல்லே. எந்த ஊரா இருந்தாலும் எந்த நாடா இருந்தாலும் இருந்தாலும் இதே நிலமைதான்.

அதிகாரத்துல இருக்க போலீஸ்காரங்களே சட்டக்கல்லூரில ஒருத்தனை போட்டு நாலு பேரு கம்பியால அடிக்கும்போது வேடிக்கைதான பாத்துக்கிட்டு இருந்தாங்க. பின்ன சாதாரண பொதுமக்கள் என்ன பன்னுவாங்க. சரி ஸ்வாதிய கொலை பன்ன இடத்துல சுவாதியோட அப்பாவே நின்னுருந்தாலும் அவரால என்ன பன்னிருக்க முடியும்னு நினைக்கிறீங்க. அதிகபட்சம் அந்தப் பொண்ணை உடனடியா ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போக முயற்சி பன்னிருப்பாரே தவிற கொலை பன்னவன புடிக்கவோ தடுக்கவோ முயற்சி பன்னிருப்பாரான்னு கேட்டா கண்டிப்பா இருக்காது.

அங்க இருந்த மக்கள் கோழைகளாம். கொலை பன்னவன துரத்திப்பிடிக்க துப்பில்லாதவங்களாம். வீரம்ன்னா என்ன? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதா.. சத்தியமா இல்லை.. Responsibility இல்லாம இருக்கதுக்குப் பேருதான் இப்பல்லாம் வீரம். யாரு ஒருத்தன் அவனப் பத்தியோ அவன நம்பியிருக்க குடும்பத்தப் பத்தியோ கவலைப்படாம எல்லாத்துலயும் முன்னால நிக்கிறானோ அதத்தான் நம்ம இப்பல்லாம் வீரம்னு சொல்றோம்.

அங்க நின்ன எல்லாருக்கும் ஒரு குடும்பம் இருக்கு. இண்டெர்நெட்ல நியூஸ் பாத்து தெரிஞ்சிக்கிட்ட உங்களுக்கே அந்த கொலைகாரன் மேல இவ்வளவு கோவம் இருக்கும் போது நேர்ல பாத்தவங்களுக்கு இல்லாம இருக்குமா? ஒரு பொண்ணை அதுவும் இத்தனை பேர் இருக்க இடத்துல முகத்துல வெட்டி கொல்லுதுன்னா அது மனுஷ ஜென்மமாவா இருக்கும்?

ஆனா இன்னும் ஒரு விஷயத்த நம்ம யோசிக்கனும். இதே சென்னையா இல்லாம ஒரு தமிழ்நாட்டுல வேற எதாவது ஒரு கிராமத்துல இப்படி ஒரு தனிமனிதன் ஒரு பெண்ணை தாக்கிட்டோ, கொலை பன்னிட்டோ அவ்வளவு சீக்கிரத்துல தப்பிக்க முடியாது. அட்லீஸ் அவனப் பிடிக்கிறதுக்காவது முயற்சி செஞ்சிருப்பாங்க. ஆனா சென்னையில அப்படி எதுவுமே நடக்கல. ஏன்?

ஒரு தனிமனிதனைப் பொறுத்த அளவு பலம்ன்னா என்ன? உடல் அளவுல அவன் எவ்வளவு பலசாலியா இருக்கான்ங்குறது பலம் இல்லை. உடல் அளவுல எவ்வளவு பலசாலியா இருந்தாலும் அதிகபட்சம் ரெண்டு மூணு பேர சமாளிக்க முடியுமா? அவ்வளவுதான். உண்மையா ஒரு மனிதனோட பலம்ங்குறது அவனுக்கு ஒண்ணுன்னா எத்தனை பேர் அவனுக்காக வந்து முன்னால நிப்பாங்கங்குறதப் பொறுத்துதான் இருக்கு..

ஒரு கிராமத்த எடுத்துக்கிட்டா ஒரு தனிமனிதன் கிட்டத்தட்ட மொத்த கிராமத்துக்குமே பரிட்சையமான ஆளா இருப்பான். அவனுக்கு ஒரு பிரச்சனைன்னா “டேய் நம்ம ஊர்காரன எவனோ அடிச்சிட்டாண்டோய்” ன்னு அந்த ஊரே வரும். இல்லை அவனோட ஜாதிக்காரங்களாவது வருவாங்க. அவன் எதாவது கட்சில இருந்தா அந்த கட்சிக்காரனுங்க வருவாங்க. அட்லீஸ்ட் அவன் தெருவுல இருக்கவனுங்களாவது வருவானுங்க. எதாவது ஒரு வகையில எதோ ஒரு மக்கள் கூட்டத்துலருந்து நமக்கு சப்போர்ட் இருக்கும். ஒருத்தனுக்குப் பின்னால இருக்க அந்த சப்போர்ட் தான் அந்த தனி ஆளோட வீரம்.

ஆனா அதே வேற சென்னையில வந்து நம்ம வாழத் தொடங்கும்போது நம்ம தனிமைப் படுத்தப்படுறோம். நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம். நமக்குன்னு தனியா ஒரு சமுதாயம் இங்க கிடையாது. நமக்கு ஒண்ணுன்னா ஓடிவர்ற மக்கள நம்ம இங்க சம்பாதிக்கல. அடுத்த வீட்டுக்காரனோட பேர் என்ன, அவன் என்ன செய்யிறான்னு தெரியாமயே பலவருஷமா குடியிருக்கவங்கல்லாம் இருக்காங்க. ”அடுத்தவன் பிரச்சனை நமக்கெதுக்கு, பொழைக்க வந்த இடத்துல நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருப்போம்” ங்குறதுதான் பெரும்பான்மையானவங்களோட மனநிலை.

நிறைய சமையங்கள்ல நீங்களே இத ஃபீல் பன்னிருப்பீங்க. காலேஜ் படிக்கும்போது உள்ளுக்குள்ள ஒரு அசாத்திய தைரியம் இருக்கும். என்ன ப்ரச்சனைன்னாலும் பாத்துக்கலாம். நம்ம காலேஜ் பசங்க இருக்காங்க.. நமக்கு ஒண்ணுன்னா அவனுங்க சும்மா விடமாட்டானுங்கங்குற ஒரு நம்பிக்கை இருக்கும். ஆனா காலேஜ் முடிச்சப்புறம் அது கொஞ்சம் கொஞ்சமா கம்மி ஆகி இப்பல்லாம் ஒருத்தன்கிட்ட வாய்சண்டை போடனும்னா கூட யோசிச்சி தான் போட வேண்டியிருக்கு. இத நா மட்டும் இல்லை நிறைய பேர் ஃபீல் பன்னிருப்பீங்க.

சென்னைன்னாலே அப்படித்தான். அங்க இருக்கவங்க யார் கூடயும் பேசமாட்டாங்க. தேவையில்லாம யார் கூடவும் பழக்கம் வச்சிக்கிட்டா அது பிரச்சனைதான்னு ஆரம்பத்துலருந்தே சொல்லி சொல்லி மொத்த ஊருமே இப்ப அப்டியே ஆகிப்போச்சு. சென்னையில இருக்க 70% மக்கள் தமிழ்நாட்டோல பிற பகுதிகள்லருந்து வந்து வசிக்கிற வந்தேறிங்க தான். ஆனாலும் நம்ம சென்னை மக்கள்லாம் மோசம்னு தான் சொல்றோம். 

யாருமே கஷ்டப்படுறவங்களுக்கு உதவக் கூடாதுன்னு நினைக்கிறதில்லை. எங்க உதவி செய்யப்போய் நமக்கே அது வில்லங்கமா மாறிடுமோன்னு தான் நினைக்கிறாங்க. இன்னிக்கு எதுவும் செய்யாம நின்ன அதே மக்கள்தான் 6 மாசம் முன்னால வெள்ளத்துல சிக்கினப்போ ஒதுங்கிப் போகாம ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சிகிட்டவங்க. இன்னிக்கு அந்தப் பொண்ணை யாரும் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டுப் போகலைன்னு எல்லாரும் கொதிக்கிறாய்ங்க. ஆக்ஸிடெண்ட் ஆகி உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்க ஒருத்தனை ஆம்புலன்ஸும் போலீஸூம் வர்றதுக்கு முன்னால ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போனாலே என்னென்ன கேள்வி கேப்பாங்கன்னு தெரியும். அப்டி இருக்க, ஒரு க்ரைம் சீன்ல உயிரோட இருக்காங்களா இல்லையான்னு தெரியாத ஒரு பொண்ணை எப்படி தைரியமா நம்மாளுங்க தூக்கிட்டு போயிருப்பாங்க.

இன்னிக்கு சில நடிகை நடிகைகளும், பிரபலங்களும்கூட ஸ்டேஷன்ல நின்ன பொதுமக்களை தரக்குறைவா பேசுறதப் பாக்க முடியுது. ஒருவேளை அவங்க ஸ்பாட்ல இருந்துருந்தா அவங்க செய்ய நினைக்கிறத செஞ்சிருக்கலாம். ஏன்னா நா மேல சொன்னா மாதிரி அவங்க ப்ரபலம்ங்குறதுதான் அவங்களோட தைரியம். அவங்களுக்கு ஒண்ணுன்னா ஒட்டுமொத்த பத்திரிக்கையும் அத கவர் பன்னும். ஆனா ஒரு சாதாரண மனிதனுக்கு அப்படி இல்லை.

என்னிக்கு நமக்கு ஒண்ணுன்னா நாலுபேர் முன்னால வருவாங்கங்குற தைரியம் ஒவ்வொருத்தனுக்கும் வருதோ அப்பதான் இந்தமாதிரி குற்றங்கள தட்டிக்கேக்குற தைரியம் ஒவ்வொருத்தனுக்கும் வரும். ஆனா அப்படி ஒரு நாள் கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் இருக்கதா தெரியல. 



Monday, June 20, 2016

முத்தின கத்திரிக்கா!!!


Share/Bookmark
உங்களுக்கெல்லாம் ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி நம்ம ஒரு சுந்தர்.சி ஃபேன். அவர் இயக்குனரா இருக்கப்ப மட்டும் இல்லை. ஒரு நடிகராக் கூட எனக்கு அவர ரொம்பப் புடிக்கும். அவர ஸ்க்ரீன்ல பாக்கும்போது எனக்கு எதோ ஒரு நல்ல ஃபீல் இருக்கும். நீங்கல்லாம் இதுவரைக்கும் டிவில கூட பார்த்திராத “தீ” “ஐந்தாம்படை” போன்ற படங்களையெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் பன்னி பாத்தவன் நானு. இதக் கேட்டவுடனே சேரன் பாண்டியன்ல கவுண்டர் சொல்ற மாதிரி “இய்ய்… இவனையா கும்புட்டோம்.. வீட்டுக்கு போனோன அடுப்புல கைய வச்சி கருக்கிரனும்” ங்குற ரேஞ்சுல எதாவது ஒரு வசனம் உங்க மைண்டுல ஓடும்னு எனக்கு தெரியும். என்ன பன்றது சில பேருக்கு சில டேஸ்டுகள்.

ஊருக்கு போற வெள்ளிக்கிழமைகள்ல ரிலீஸ் ஆகுற படங்கள முதல்நாளே பாக்க முடியிறதில்லை. சுமார் 8 மாசத்துக்கு முன்னால Lenovo K3 note ன்னு ஒரு ஃபோன் வாங்குனேன். கடந்த ஒரு மாசமா என்னப்போட்டு அது பாடா படுத்துனதால சர்வீஸுக்கு விடனும்னு முடிவு பன்னி ஒரு அரை நாள் லீவப் போட்டுட்டு மவுண்ட் ரோட்டுல உள்ள சர்வீஸ் செண்டருக்கு மதியம் போற ப்ளான். சரி படம் வேற இன்னும் பாக்கலயேன்னு, ஷோ செக் பன்னா எஸ்கேப்ல 3:30 மணிக்கு ஒரு ஷோ. டிக்கெட்டும் இருந்துச்சி. முன்னாலயே புக் பன்னப்புறம் சர்வீஸ் செண்டர்ல லேட் ஆக்குனாய்ங்கன்னா வேஸ்டா போயிருமே… இன்னிக்கு திங்கக் கிழமைதானே ஒருபயலும் இருக்கமாட்டன். நேராப் போயே எடுத்துக்குவோம்னு நினைச்சி ஆஃபீஸ்லருந்து வண்டில கிளம்பிட்டேன்.

எல்லாம் ப்ளான் படி கரெக்டா தான் போச்சு. “சார் ஒரு ஒருவாரம் கழிச்சி ஃபோன் பன்னி கேட்டுக்கிட்டு வந்து ஃபோன வாங்கிக்குங்க சார்” ன்னு சர்வீஸ் செண்டர்ல சொல்ல, 3:15 க்கெல்லாம் டான்னு அங்கிருந்து கிளம்பிட்டேன். அங்கிருந்து ரெண்டே நிமிஷத்துல எக்ஸ்ப்ரஸ் அவென்யூ. பைக்க பார்ர்க்கிங்ல விட்டுட்டு கரெக்ட்டா நாலு ஃப்ளோரு ஏறி எஸ்கேப் குள்ள நுழையும் போது மணி 3:25. ”என்னா டைமிங்கு.. ச்ச.. டைமிங்ல வெள்ளக்காரனயே மிஞ்சிருவ போலருக்கேன்னு” மனசுக்குள்ளயே மகிழ்ச்சிய வச்சிக்கிட்டு, பாக்ஸ் ஆபீஸ்ல நின்ன புள்ளைக்கிட்ட போய் “முத்தின கத்திரிக்கா 3:30 ஷோ ஒண்ணு  குடுங்க” ன்னேன்.

“Sold out Sir” ன்னுச்சி. சரியாக் கேக்காததால  “என்னங்க?” ன்ன்னு திரும்ப கேட்டேன்.. சத்தமா “Sold Out sir” ன்னுச்சி. அடக் காவாளிப்பயலுகளா.. ஊர்ல முக்காவாசி பயலுக வேலையில்லாமதான் இருக்கீங்களா.. என் உழைப்பெல்லாம் வீணாப் போச்சே.. என்னோட வெள்ளக்கார டைமிங்கெல்லாம் நாசமா போச்சே.. விடக்கூடாதுன்னு இடுப்புல கைய வச்சிக்கிட்டு “ ஒரு சுந்தர்.சி யோட வெறி புடிச்ச ஃபேன் வந்துருக்கேன். எனக்கே டிக்கெட் இல்லைங்குற” ன்னு கண்ணாலயே ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு அந்தப்புள்ள “ சுந்தர்.சி யே வந்தாலும் டிக்கெட் இல்லை.. மூடிட்டு கெளம்பு” அப்டின்னு கண்ணாலயே சொல்லுச்சி. அப்டி டீசண்ட்டா பேசிப் பழகிக்கன்னு வந்ததுக்கு ரெஸ்ட் ரூம்ல போய் பிஸ் அடிச்சிட்டு 30 ரூவா பார்க்கிங் குடுத்துட்டு வந்தேன். ஒரு பிஸ்ஸுக்கு 30 ரூவாங்குறத நினைக்கும் போது இன்னொரு மேட்டர் ஞாபகம் வருது. மைண்ட்ல வச்சிக்குங்க கடைசில சொல்றேன்.. விமர்சனம் எழுத வந்து எங்கெங்கயோ போயிருச்சி.

Vellimoonga ங்குற மலையாளப் ஹிட்டோட ரைட்ஸ் வாங்கி தயாரிச்சி நடிச்சிருக்காரு தல சுந்தர்.சி. முரட்டுக்காளைல கால் உடைஞ்சதோட நடிப்ப நிறுத்திருந்த சுந்தர்.சி அரண்மணை 1& 2 மூலமா சைடு ஹீரோவ வந்து திரும்பவும் மெய்ன் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிருக்காரு. அவரு ஆளுக்கும் சைஸுக்கும் செட் ஆகுற மாதிரியான கேரக்டர் தான்.

தாத்தா காலத்துலருந்து அரசியல் அல்லக்கைகளா இருந்த சுந்தர்.சி ஃபேமிலில, அப்பா சீக்கிரமே இறந்துபோயிட குடும்பத்தோட மொத்த பொறுப்பும் சுந்தர்.சி மேல விழுது. தம்பி தங்கைய படிக்கவச்சி கல்யாணம் பன்னிக்குடுத்த பிஸில தலைவர் கல்யாணம் பன்னிக்க மறந்துடுறாரு. வயசு நாப்பதுக்கு மேல ஆயிடுது. சைடுல ADBD ங்குற கட்சியையும் நடத்திட்டு வர்றாரு. அந்த கட்சில கேங்கும் அவருதான் லீடரும் அவருதான். அவர ”தலைவா தலைவா”ன்னு சொறிஞ்சி விட்டுக்கிட்டு கூடவே வர்ற அல்லக்கையா சதீஷ்.

ஊர்ல உள்ள ரெண்டு எதிர் கட்சித் தலைவர்களா VTV கணேஷும், சிங்கம் புலியும். ஒரு கட்டத்துல சுந்தர்.சி பூணம் பாஜ்வாவ பாத்து லவ்வாயிடுது. அந்தப் புள்ளைக்கும் லவ்வு தான். ஆனா பொண்ணு பாக்கப் போகும் போது நெஞ்சைக் கிழிக்கிற அளவுக்கு ஒரு ட்விஸ்ட் காத்திருக்கு. பொண்ணோட அப்பா அம்மாவா ரவிமரியா & கிரன். அதுக்கப்புறம் கட்சிய கவனிச்சாரா, பூணத்த கல்யாணம் பன்னாராங்குறதுதான் ரெண்டாவது பாதி.

வழக்கமா சுந்தர்.சி இயக்குர படங்கள்ல இருக்க மாதிரியே காமெடில கலக்குறதுக்கு ஏத்த ஸ்கிரிப்டு. நிறைய இடங்கள்ல வயிறு குலுங்க சிரிக்கவும் வச்சிருக்காங்க. ஆனா இன்னும் நிறைய சிரிக்க வச்சிருக்கலாம். அந்த கதைக்களத்துக்கு சுந்தர்.சி படத்த இயக்கிருந்தாருன்னா படத்தோட ரேஞ்சே வேற.

படத்தோட முதல் drawback casting தான். ”கோரிப்பாளையம்” “எத்தன்” மாதிரியான மொக்கை காமெடி படங்கள்ல நடிச்சி சிங்கம் புலிய ஸ்க்ரீன்ல பாத்தாலே இப்பல்லாம் அந்தப்  படத்தோட மதிப்பே போயிருது. இன்னொன்னு VTV கணேஷ். அவருக்கு ஒரு சின்ன ரோல் குடுத்து ரெண்டு மூணு சீன் குடுக்குறது ஓக்கே. ஆனா ஒரு மெய்ன் கேரக்டரக் குடுத்து படம் ஃபுல்லா அவர் பேசுறது அப்பப்ப படத்துக்கு நடுவுல ஒரு எறுமை வந்து கத்திட்டு போற மாதிரியே இருக்கு.

அடுத்தது சதீஷ். சும்மாவே அவர் மூஞ்ச பாக்க முடியாது. இதுல படு மொக்கையான ஒட்டுமீசை வேற. சகிக்கல. அவருக்கு எழுதிருக்க counter வசனங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா அத அவர் சொல்றது நல்லா இல்லை. தேசிங்கு ராஜா படத்துல ரவி மரியாவ வச்சி ரொம்ப சீரியஸான சீன்ல கூட காமெடி பன்னிருப்பாங்க. இதுலயும் அந்த மாதிரி எதாவது செஞ்சிருக்கலாம். ஆனா ஒண்ணும் இல்லை.

படத்துல சுந்தர்.சி போராட்டம் பன்ற வர்ற ஒரு பெரிய சீக்வன்ஸூம், ஒரு பன்னி மூஞ்சி வாயன் வர்ற ரெண்டு மூணு சீனும் செம காமெடி. முதல் பாதி நல்லாவே இருந்துச்சி. முதல் 5 நிமிஷம் RJ பாலாஜி பன்ற narration னும் நல்லாருந்துச்சி. எந்த சீனுமே அருக்கல. அப்பப்பா நல்ல நல்ல காமெடிய வச்சி ஆடியன்ஸ எங்கேஜ் பன்னி வச்சிருந்தாங்க.

ரெண்டாவது பாதில அரசியல், ப்ரச்சாரம்னு படம் போறதுல காமெடி கொஞ்சம் கம்மி. அதும் ரொம்பவே யூகிக்கிற மாதிரியான க்ளைமாக்ஸ். கிரணுக்கும், சுந்தர்.சிக்கு இடையில உள்ளது கொஞ்சம் காரித்துப்புற மாதிரியான கெமிஸ்ட்ரின்னாலும் காமெடிங்குறதுக்காக ஒண்ணும் பெருசா தெரியல.

நான் சுந்தர்.சி க்கு எப்டி ஃபேனோ அதே மாதிரி பூணம் பாஜ்வாக்கும் “சேவல்” படத்துலருந்தே ஃபேனு. அதனால அந்தப் புள்ளையையும் படத்துல  ரொம்ப புடிச்சிருந்துச்சி. ஆனா சற்று பல்க் ஆயிருச்சி. க்ளோஸ் அப் காட்சிகள்ல கொஞ்சம் டெடரா இருக்கு. படம் முழுக்க சுந்தர்.சி வெள்ளை வேஷ்டி சட்டையில நீட்டா வந்துட்டு போறாரு. குத்துப்பாட்டுங்குற பேர்ல கொல்லல. ரெண்டே பேர கட்சில வச்சிக்கிட்டு டெல்லி, MLA சீட்டுன்னு அடிச்சி விடுறதெல்ல்லாம் படத்துக்கு பொய்ட்டோமேன்னு தாங்கிக்க வேண்டியிருக்கு. சுந்தர்.சி யோட கோ-டைரக்டரா இருந்த வெங்கட் ராகவன்ங்குறவர் இயக்கிருக்காரு. ரீமேக்குங்குதால பெருசா சொல்ல ஒண்ணும் இல்லை. “சும்மா சொல்லக்கூடாது” பாட்டத்தவற மத்ததெல்லாம் கப்பி. BGM ரொம்ப சுமார் ரகம்.

மத்தபடி படத்துல எந்த சீனும் போரடிக்கல. சில சீன் வயிறு குலுங்க சிரிக்க வச்சிருக்காங்க. ஃபேமிலியோட இந்த வாரம் எதாவது படத்துக்கு போக ப்ளான் பன்னிருந்தா இந்தப் படத்துக்கு நம்பி போகலாம். ஆனா பெரிய லெவல்லயும் எதும் எதிர்பாக்காதீங்க.


சரி மேல எதோ சொல்றேன்னு சொல்லிருந்தேனே.. அந்த 30 ரூவா குடுத்து ரெஸ்ட் ரூம் பொய்ட்டு வந்தத நினைச்சா , சில வருஷங்களுக்கு முன்னால அயல் நாட்டுல இருந்தப்ப நடந்த சம்பவம் ஓண்ணு ஞாபகம் வந்துச்சி. ”PIRELLI TYRES” ங்குற கஸ்மர்  சைட்ல வேலை பாத்துட்டு இருந்தப்போ திடீர்ன்னு அடிவயிற்றிலே ஜலபுலஜங்க்ஸ் ஆகி, கலக்கி விட்ருச்சி. கொடுமை என்னன்னா அந்த ப்ளாண்ட் ஃபுல்லாவே எந்த டாய்லெட்லயும் தண்ணி இருக்காது. ஒன்லி பேப்பர். இங்க கொடம் கொடமா ஊத்துன நமக்கு பேப்பர் காலாச்சாரத்தோட சேர்றது ரொம்பக் கடினம். அப்புறம் என்ன டாக்ஸி வரச் சொல்லி ஹோட்டலுக்கு போய், ஃப்ரீயா பொய்ட்டு திரும்ப கம்பெனிக்குப் போனேன். அன்னிக்கு கக்கா போறதுக்காக டாக்ஸிக்கு குடுத்தது கிட்டத்தட்ட 2000 ரூவாய்க்கு மேல. அதுக்கு இது பரவால்லன்னு நினைச்சிட்டு வந்தேன்.  


Monday, June 13, 2016

THE CONJURING 2 - பேய்க்கு சோறு வச்சியே பேரு வச்சியா?!!


Share/Bookmark
தியேட்டருக்கு எப்படி நம்ம படத்த ரசிச்சி பாக்கனும்னு நினைச்சி போறோமோ மத்தவங்களும் அப்டித்தான் வந்துருப்பாங்கன்னு முதல்ல நாம புரிஞ்சிக்கனும். நம்ம எஞ்ஜாய் பன்றதுக்காக அடுத்தவங்களோட மகிழ்ச்சியை குறைக்கிறது காவாலித்தனம். தியேட்டர்ல படம் பாக்கும்போது கமெண்ட் அடிக்கிறதுங்குறதும் ஒரு கலை. டைமிங் ரொம்ப முக்கியம். எப்ப அந்த கமெண்ட்ட பாஸ் பன்னா எல்லாரும் ரசிப்பாங்கன்னு தெரிஞ்சி செய்யனும். ஒரு படம் ரண கொடூரமா அருத்துக்கிட்டு இருக்கும்போது கமெண்ட் அடித்து காட்சிகளை ஓட்டும்போது நமக்கு மட்டும் இல்லாம மத்தவங்களுக்கும் அது ஜாலியா இருக்கும். அது இல்லாம நாம நாலு பேர் ஒண்ணா சேர்ந்து போயிருக்கோம்ங்குற ஒரே காரணத்துக்கு சும்மா சும்மா மழைகாலத்துல தவளை கத்துற மாதிரி காய் மூய்னு சிரிப்பு வராத கமெண்ட்டா அடிக்கிறது மன நலம் குன்றியவங்க செய்யிற வேலை.

பெரும்பாலும் எல்லா பேய் படங்களுக்கும் இந்த வேலை நம்மூர்ல நடக்கும். பேய் வர்ற மாதிரி காமிச்சாலே இங்க இவனுங்க வித்யாசமான சவுண்ட குடுக்க ஆரம்பிச்சிருவானுங்க. பயப்படுறதுக்குதான் பேய் படங்களுக்கு போறோம். இந்த நாயிங்க அதயே கெடுத்து விட்டுருதுங்க. சனிக்கிழமை சங்கம் சினிமாஸ்ல இந்தப் படத்துக்கு போனோம். அதிகபட்சம் 12 வது படிக்கும் ஒரு ஆறு ஏழு நாதாரிங்க எங்களுக்கு பின் வரிசையில உக்காந்துகிட்டு கமெண்ட் அடிக்கிறேன்குற பேர்ல கத்தி போட்டுக்கிட்டு இருந்தாய்ங்க. “கொஞ்சம் அமைதியா பாருங்க  பாஸ்” ன்னா “தியேட்டர்ல எஞ்சாய் பன்னத்தான பாஸ் வந்துருக்கோம்” ன்னுச்சி ஒரு நாயி. த்தா மத்தவன்லாம் உன் வாயப் பாக்க வந்துருக்காய்களா. எந்திரிச்சி சப்புன்னு ஒருத்தனுக்கு கன்னத்துல விடலாம் போல இருந்துச்சி. ஆனா அந்த ஏரியா நம்ம கண்ட்ரோல்ல இல்லாததால முறுக்கிட்டு இருந்த என்னோட நரம்ப, கூல்டவுன் பன்னி படம் பாத்துட்டு வந்தேன்.

Conjuring 1 பெரும்பாலும் எல்லாரும் பாத்துருப்பாங்க. அந்தப் படத்தோட தாக்கத்தால சென்னையில கிட்டத்தட்ட இந்த weekend எல்லா தியேட்டர்கள்லயும் Conjuring 2 க்கு நல்ல வரவேற்பு. அரங்கு நிறைந்த காட்சிகளா ஓடுது. சுந்தர்.சி க்கு காமெடிப்படங்கள் மாதிரி James Wan க்கு பேய் படங்கள். ஒரு வீட்ட மட்டும் புடிச்சி குடுத்துட்டா இன்னும் ஒரு 10 படம் கூட எடுப்பாரு போல.

Insidious 1, Insidious 2, Conjuring 1, Conjuring 2 ன்னு ஒரே பேய் படமா எடுக்குறதால எது எதோட லிங்குன்னே கன்பீஸ் ஆகுற ஸ்டேஜ்ல இருக்கேன். இதுக்கிடையில Annabelle, Insidious 3 ன்னு ரெண்டு துயர சம்பவத்த பாத்த கதைய ஏற்கனவே சொல்லிருக்கேன்.

வழக்கம்போல ஒரு நான்கைந்து குழந்தைகளோட ஒரு அம்மா ஒரு வீட்டுல குடியேறுறாங்க. ரெண்டு மூணு நாள்ல பேய் வேலையக் காட்ட ஆரம்பிக்கிது. அப்டியே கொஞ்ச நாள்ல அந்த குழந்தைகள்ல ஒரு பொண்ண புடிச்சிருது. அதுக்கப்புறம் அந்தப் பொண்ணு அப்பப்ப ஆம்பள வாய்ஸ்ல பேச ஆரம்பிக்கிது. “இது என் வீடு… இங்க யாரும் இருக்கக்கூடாது” ன்னு எல்லாரையும் பயமுறுத்துது.  

பெரும்பாலும் ராத்திரியில் நடக்குற காட்சிகள் தான். கேமரா செம. இரவு நேர காட்சிகள்ல ரொம்ப ரொம்ப கம்மியான வெளிச்சத்துல படம் புடிச்சிருக்காங்க. அந்த காட்சிகள்ல தெரியிற இருட்டே ஒரு மாதிரி பயத்த கிளப்பி விடுது. அந்தக் குழந்தைக்கு பேய் முத்திப் போயிட, அதன் பிறகு எண்ட்ரி ஆகுறாங்க நம்ம பேய் ஓட்டும் தம்பதிகள். பேய் இருக்கா இல்லையான்னு இவங்க கண்டுபுடிச்சி சொன்னாதான் அதுக்கப்புறம் சர்ச் மூலமா Exorcism பன்னுவாங்க.

பேயோட்டும் தம்பதிகள் அந்த வீட்டுக்கு வந்தோன்ன பேய கூப்டு வச்சி ஒரு இண்டர்வியூ எடுக்குறாய்ங்க. அடேய் என்னடா டிவி ப்ரோகிராமுக்கு பேட்டி எடுக்குற மாதிரி எடுக்குறீங்க.

ஹீரோ: “நீங்க யாரு?”

பேய்: “என் பேரு பில்”

ஹீரோ: “நீங்க எப்டி செத்தீங்க?

பேய்:  “செத்தத கூடவா மறப்பாங்க.. அந்த முக்குல ஒரு சேர் இருக்குல்ல… அதுல உக்காந்தபடியே வாயப் பொளந்துட்டேன்”

ஹீரோ:  “ஆமா இப்ப எதுக்கு இங்க இருக்கீங்க?”

பேய்:  “அட செத்து ரொம்ப நாள் ஆச்சேன்னு என்னோட குழந்தை குட்டிங்கள பாக்க வந்தேன்… ஆன அவங்க யாரும் இங்க இல்லை”

ஹீரோ: அதான் யாரும் இல்லையே மூடிகிட்டு கெளம்ப வேண்டியது தானே? இங்க ஏன் இவங்கள பயமுறுத்துற?”

பேய்:  அவங்க பயப்படுறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அதான் இங்கயே இருக்கேன்

அடக் கெழட்டுப் பேயே… செத்ததுக்கப்புறமும் உனக்கு குஜால்ஸ் கேக்குதான்னு அந்தப் பேய திட்டிக்கிட்டு இருப்போம். ஆனா கடைசில ஒரு செண்டிமெண்ட போட்டாய்ங்க பாருங்க.

ஹீரோயினுக்கு பேய்களோட communicate பன்ற ஒரு ஸ்பெஷல் பவர் இருக்கும். அதவச்சி அந்த கிழவன் பேய போய் பாத்தா, அது பாவமா ஒரு கதை சொல்லுது “அட அந்தக் கொடுமைய ஏம்மா கேக்குற.. நா என் குழந்தைகள பாக்க தான் வந்தேன். அவங்க இல்லைன்னதும் நா போகலாம்னு தான் நினைச்சேன். ஆனா ஒரு பெரிய பேய் என்னப் போக விட மாட்டேங்குதும்மா.. வயசான காலத்துல என்னால முடியலம்மா” ன்னு கதறுது. நானே கண்ணுல ஜலம் வச்சுண்டேன்.

அப்புறம் பெரிய கிழவி பேய் ஒண்ணு சார்ஜ் எடுத்து எல்லாரையும் வாட்டி வதைக்கிது. ஒண்ணுமே பன்ன முடியல. அப்ப ஹீரொயின் ஒண்ணு சொல்லுவா பாருங்க. “பேயோட பேர கண்டுபுடிச்சா அத நம்ம கண்ட்ரோல் பன்னிடலாம்” ன்னு. ”ஆட்டோ கண்ணாடிய திருப்புனா எப்புடிம்மா ஆட்டோ ஓடும்? ஏம்மா இதெல்லாம் ஒரு பேயோட்டுற டெக்கினிக்காம்மா… என்னம்மா நீங்க இப்புடி இருக்கீங்களேம்மா” ன்னு நமக்குத் தோணும்.

படம் Conjuring 1 க்கு கொஞ்சம் கூட சளைச்சது இல்லை. அதே அளவு நம்மள பயமுறுத்திருக்காங்க. James Wan கிட்ட உள்ள ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா நான் ஸ்டாப்பா பயமுறுத்திட்டே இருப்பாரு. இடையில கதைய சொல்றேங்குற பேர்ல கொஞ்ச நேரம் மொக்கை போடுற வேலையே இருக்காது.




அந்த பேயால அஃபெக்ட் ஆகுற ஹீரோயின் பாப்பா முகத்த எங்கயோ பாத்த மாதிரி எனக்கு ஒரு ஃபீல். ஒரு சாயல்ல ஹாரி பாட்டர் “ஹெர்மாய்னி” மாதிரி தெரிஞ்சிது. ஆனாலும் இதவிட பழக்கப்பட்ட இன்னொரு நாடா இருக்கேன்னு யோசிட்டே இருந்தேன். கண்டுபுடிச்சிட்டேன். அந்த ஹேர் ஸ்டைலும், ஃபேஸ்கட்டும் பாக்குறப்போ அப்டியே ரோஹித் ஷர்மா வொய்ஃப் மாதிரியே இருக்கு அந்தப் புள்ள.

படத்துல பேயக்காட்டி பயமுறுத்துனப்பல்லாம் கல்லு மாதிரி இருந்த நான், கடைசில படத்தோட கேரக்டர்களையும், அந்த கதை உண்மையா நடந்தப்ப இருந்த கேரக்டர்களையும், உண்மையான பேய் பிடிச்ச குழந்தை பேசுன டேப்பையும் போட்டப்போ டர்ர்ராயிட்டேன். 

மொத்தத்துல Conjuring 2 ஏமாத்தல. நல்லா பயமுறுத்திருக்காங்க. ஆனா இந்த காவாலிப்பயலுக தொல்லை இல்லாத தியேட்டர்ல பாருங்க. அப்டி இல்லைன்னா ரெண்டு மாசம் கழிச்சி டவுன்லோட் பன்னியே பாருங்க.





Friday, June 10, 2016

அப்டியே “சூ” ன்னு விரட்டிட்டு போங்க!!!


Share/Bookmark


அஜித் படத்த பத்தி எழுதும் போது விஜய் ரசிகர்கள் திட்டுறதும் விஜய் படத்தப்பத்தி எழுதும்போது அஜித் ரசிகர்கள் திட்டுறதும், சூர்யா படத்த பத்தி எழுதும்போது ரெண்டுபேரும் சேர்ந்து திட்டுறதும் சகஜம் தான். ஆனா மத்தவங்க நம்ம தளத்தப் பத்தி என்ன நினைக்கிறாங்க.. திட்டனும்னு நினைச்சாலும் அட என்னப்பா.. login பன்னனும்... கமெண்ட் டைப் பன்னனும்ங்குற அலுப்புலயே திட்டாம போயிடுறாங்க. நா பாட்டுக்கு எனக்குத் தோணுனத எழுதிட்டு இருக்கேன். அதனால உங்க கருத்தைக் கேக்க  சிம்பிளா ஒரு feedback form. மறக்காம கீழ உள்ள லிங்க்க க்ளிக் பன்னி உங்க கருத்த சொல்லுங்க. 

ஐ ஆம் வொய்ட்டிங்க்


  CLICK HERE            







Tuesday, June 7, 2016

இறைவி – தரம்!!!


Share/Bookmark
கடந்த நாளு நாளா ஃபேஸ்புக்கு டிவிட்டர் மட்டும் இல்லாம இன்ன பிற வலைத்தளங்கள் எதைத் தொறந்தாலும் எல்லா இடத்திலும் “இறைவி” “இறைவி” ங்குற வார்த்தையப் பாத்து எல்லாருக்கும் சலிச்சு போயிருக்கும். ஃபேஸ்புக்குல நாலு வருஷத்துக்கு முன்னால அக்கவுண்ட் மட்டும் ஓப்பன் பன்னிட்டு காணாம போனவன்லாம் திடீர்னு ”இறைவிடா” ங்குறான். ஸ்லீப்பர் செல்லுங்கல்லாம் ”உலகசினிமாடா” ங்குறாய்ங்க. ”நீங்கல்லாம் இவ்வளவு நாளா எங்கடா இருந்தீங்க” ன்னு தோணுச்சி. ஒரு பக்கம் எக்ஸ்ட்ரீம் ஆஹா ஓஹோ.. இன்னொரு பக்கம் அதுக்கு நேர் எதிரா தரை ரேட்டுக்கு உக்காரவே முடியல, கண்றாவி போன்ற கருத்துக்கள். வாரக்கடைசில ஊருக்கு பொய்ட்டதால முதல் நாளே படத்த பாக்க முடியல. நேத்து வந்து மொத வேலையா டிக்கெட் புக் பன்னா, Idream ல 1st க்ளாஸ்ல மட்டும் நாலே டிக்கெட்டுதான் இருந்துச்சி. மத்ததெல்லாம் ஃபுல்லு. அவசர அவசரமா அதுல ஒண்ண புக் பன்னிட்டு தியேட்டருக்குப் போனா…. ங்கொய்யால…  நா மட்டும் தான் இருக்கேன். மத்த ஒரு பயலக் காணும். முக்கால் வாசி தியேட்டர் காலி.. டேய் என்னடா பித்தலாட்டம் இது…. இப்டித்தான் நீங்க ஆன்லைன்ல ஃபுல்லுன்னு காமிச்சி ஊர ஏமாத்துறீங்களாடா?

சில படங்களுக்கு க்ளைமாக்ஸ் என்னன்னு முன்னாலயே தெரிஞ்சா, முதல்லருந்தே படம் பாக்குற இண்ட்ரஸ்ட் போயிரும். அந்த மாதிரி படங்களுக்கு பொதுவா படத்தோட ஆரம்பத்துலயே ஸ்லைடு போட்டு “இந்த கதையையோ க்ளைமாக்ஸயோ வெளில சொல்லாதீங்கன்னு போடுவாங்க. உதாரணமா “கோ” படத்துல அஜ்மல்தான் வில்லன்னு முன்னாலயே நமக்குத் தெரிஞ்சா படமே நம்மால ஒழுங்கா பாக்க முடியாது. ”சமர்” ன்னு ஒரு விஷால் படம். நானும் என் ஃப்ரண்டும் பைக்குல படத்துக்கு போயிட்டு இருக்கோம். அப்ப திடீர்னு அவன் “டேய் இது The Game படத்தோட காப்பியாம்டா” ன்னான். அவ்வளவுதான் சுர்ர்ர்ர்னு ஆயிருச்சு. ஏன்னா Game ah நா முன்னாலயே பாத்துருந்தேன். ”சமர்” ல ஒரு சீன் கூட என்னால concentrate பன்னி பாக்க முடியல. ஒரு வேளை அவன் சொல்லாம படம் பாத்து நானா அது Game படம்ன்னு கண்டு புடிச்சிருந்தா கூட சில காட்சிகள் ரசிச்சி பாத்துருப்பேன்.

சரி இப்ப எதுக்கு இத சொல்றேன்னா, படம் ரிலீஸூக்கு முன்னாலயே கார்த்திக் சுப்பராஜ் படத்தோட கதைய வெளில சொல்லாதீங்கன்னு ட்வீட் பன்னிருந்தாப்ள. அவர் சொல்றத விட, படம் பாக்குற நமக்கு எத சொல்லலாம் எத சொல்லக் கூடாதுங்குற ஒரு சென்ஸ் இருக்கனும். சில பேரு விமர்சனம்ங்குற பேர் படத்துல என்னென்ன ட்விஸ்டு, யார் யார் என்னென்ன பன்றாங்க மொதக்கொண்டு எல்லாத்தையும் சொல்லி எழுதிருக்காங்க. அட்லீஸ்ட் எழுதுறதுக்கு முன்னால ஒரு spoiler alert ஆவது போடுங்க. நம்ம பாக்குறப்போ நமக்கு கிடைக்கிற அந்த ஃபீல், சர்ப்ரைஸ் எல்லாம் மத்தவங்களுக்கும் கிடைக்கனும். சரி இங்க நம்ம கதையோட டுஸ்டுகளப் பத்தி எதுவும் சொல்லல. அதனால தைரியமா படிக்கலாம்.

மூணு வெவ்வேற சூழல்ல வளர்ற பெண்கள், வாழ்க்கையைப் பற்றிய அவர்களோட வெவ்வேறு எதிர்பார்ப்புகள், அவர்களுக்கு அமைந்த கணவன்களால் அவங்களோட வாழ்க்கை எப்படி மாறுதுங்குறதுதான் இறைவி.  

பொதுவா ஆண் பெண் சமம்னு பேசுனாலும், நம்மோட சமுதாய அமைப்ப பொறுத்த அளவு பெரும்பாலும் பெண்கள் ஆண்களைச் சார்ந்து தான் வாழ வேண்டியிருக்கு. வெளிநாடுகள் மாதிரி புருஷன் ரெண்டு நாள் ப்ரச்சனை பன்னா மூணாவது நாள் “ஓடிப்போங்க நாயே” ன்னு துரத்தி விட்டுட்டு அடுத்த வாழ்க்கையைத் தேடிப்போற நிலமை இன்னும் நம்மூர்ல கிடையாது. நல்லவனோ, கெட்டவனோ கிடைச்சவனை வச்சிக்கிட்டு கொஞ்ச நாள் பெத்தவங்களுக்காகவும், மத்த நாள் குழந்தைகளுக்காகவும் என்ன நடந்தாலும் பொறுத்துக்கிட்டு வாழ்க்கைய நடத்துற பெண்களுக்கு, ஆண்கள் உரிய மரியாதையையும், மதிப்பையும், நேரத்தையும் கொடுக்குறாங்களாங்குறது சந்தேகம் தான்.

எப்போதுமே ஒரு ஆணை சார்ந்து ஒரு பெண்ணோ அல்லது ஒரு குடும்பமோ நிச்சயம் இருக்கும். அவனுக்கு நடக்குற ஒவ்வொரு நிகழ்வும், அவன் எடுக்குற ஒவ்வொரு முடிவும் அவனை மட்டும் இல்லாம அவனை நம்பியிருக்க குடும்பத்துக்கும் பெரிய பாதிப்பை குடுக்கும்.

ஒரு நாள் காலையில ஏழுமணிக்கு கம்பெனிக்கு போறதுக்காக விம்கோ நகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு போனேன். அங்கங்க கும்பல் கும்பலா நின்னு எதயோ ட்ராக் பக்கத்துல உத்து பாத்துக்கிட்டு இருந்தாங்க. கொஞ்சம் பக்கத்துல போய் பாத்தோன ஒரு மாதிரி ஆயிருச்சி. ஒருத்தர் ரெண்டு பாதியா ட்ராக்குக்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் கிடக்குறாரு. இடுப்புக்கு மேல ஒரு பக்கம். இடுப்புக்கு கீழ ஒரு பக்கம். நல்லா ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை போட்டு ஆஃபீஸ்க்குதான் அவர் கிளம்பி போயிருக்கனும். என்னனு பக்கத்துல விசாரிச்சப்போ, ட்ரெயின் நிக்கிறதுக்கு முன்னாலயே இறங்க முயற்சி பன்னி உள்ள மாட்டிக்கிட்டாருன்னு சொன்னாங்க. சில பேர் எதோ எக்ஸ்ப்ரஸ் வரும்போது க்ராஸ் பன்னிட்டாருன்னாங்க. வாட்ஸாப்லயும், ஃபேஸ்புக்லயும் போடுறதுக்காக ரெண்டு துண்டான அந்த உடம்ப ரெண்டு மூணு பேரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாங்க. எனக்கு காலையில அவர ஆஃபீஸ்க்கு கிளப்பி அனுப்பிட்டு சாயங்காலம் வருவார்னு நம்பிக்கிட்டு வீட்டுல இருக்க அவர் குடும்பம் கண்ணு முன்னால வந்து போச்சு. அவங்க வாழ்க்கையே தலைகீழா மாறிப்போயிரும்.

இதுபோல ஒண்ணு ரெண்டு நிகழ்வுகள எங்க குடும்பத்துலயும் கடந்து வந்ததாலயா என்னன்னு தெரில ரோட்ல ஆக்ஸிடெண்ட்ல இறந்து போற ஒவ்வொருத்தர பாக்கும்போது எனக்கு இதே நினைப்பு தான் வரும். ஆண்களோட கோபம், ஆணவம், அலட்சியம், அவசரம் இது எல்லாம் எப்படி பெண்களோட வாழ்க்கையில விளையாடுது, எப்படி அவர்களோட வாழ்க்கையை வாழவிடாம செய்யிதுங்குறத நல்ல ஒரு கதைக்களத்தோட சொல்லிருக்க படம் தான் இந்த இறைவி.

படம் ஆரம்பிச்சி கேரக்டர்கள்லாம் அங்கங்க செட்டில் ஆகுற வரை உள்ள ஒரு பதினைஞ்சி நிமிஷம் கொஞ்சம் அருவையா இருக்க மாதிரி இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி அதிகப்பிரசங்கிகள் “மலக்கிடங்கு”ன்னு சொல்றதெல்லாம் சும்மா பப்ளிசிட்டிக்குத்தான்.

ஒரு படத்தை இயக்கிட்டு தயாரிப்பாளரோட உள்ள ப்ரச்சனையால அந்தப் படத்த ரிலீஸ் பன்ன முடியாம மன விரக்திலயே ஓவர் குடிக்கு ஆளான இயக்குனரா வர்றாரு S.J.சூர்யா. தரமான நடிப்பு. ஓவரா பேசுற ஒரு புது இயக்குனரப் பாத்து “தம்பி.. பல பேரு கிழிச்சி குப்பை கொட்டுன இடத்துல இப்ப தான் நீ கிழிக்கவே ஆரம்பிச்சிருக்க.. நம்ம பேசக்கூடாது. நம்ம படம்தான் பேசனும்”ன்னு பஞ்ச் அடிக்கும்போதும் சரி, இடைவேளை சீன்ல நல்லா அடிவாங்கிட்டு உக்காந்துருக்கும்போது செம மாடுலேஷன்ல “துப்பாக்கிய எடுத்துட்டு வந்துருப்பேன்.. அவசர சனியன்.. மறந்துட்டு வந்துட்டேன்” ன்னு சொல்றதும் தாறு மாறு.

பல பேர் S.J.சூர்யாவுக்குள் இருந்த நடிகனை கார்த்தி சுப்பராஜ் தட்டி எழுப்பிட்டாருன்னு சொல்லிக்கிட்டு திரியிறாய்ங்க. அவருக்குள்ள இருக்க நடிகன் எப்பவுமே முழிச்சிக்கிட்டு தான் இருக்கான். அன்பே ஆருயிரே படத்துல சாஸ் கொட்டுற சீன்லயோ, இல்லை நிலா ஃபோன் பேசிகிட்டு இருக்கும்போது பாதில சூர்யா வந்து “யார்கிட்ட பேசிக்கிட்டு இருந்த” ன்னு கேக்குக்குற சீன்லயோ நடிக்காத நடிப்ப ஒண்ணும் இறைவில நடிச்சிடல. ஒரே ஒரு சின்ன வித்யாசம் அதுல மீசை தாடியெல்லாம் இல்லாம பாக்க கொஞ்சம் கண்றாவியா இருப்பாரு. இதுல ஆளு பாக்க நல்லாருக்காரு அவ்வளவுதான். நாங்கல்லாம் அ.ஆ வுலயே SJ சூர்யா ஃபேனு.

விஜய் சேதுபதியும் அவரோட கேரக்டர்ல நல்லா பன்னிருக்காரு. க்ளைமாக்ஸ்ல வர்ற ரெண்டு மூணு சீனத் தவற பெருசா பர்ஃபார்மென்ஸ் காட்டுற சீன்னு சேதுபதிக்கு எதுவும் இல்லை. ஆனா அவரோட ரோல கரெக்ட்டா எந்தப் பிசிறும் இல்லாம பன்னிருக்காரு. அவருக்கு ஈக்குவலா அஞ்சலி. சொல்லபோனா சேதுபதிக்கும் மேலயே நல்லா நடிச்சிருக்கு. விஜய் சேதுபதிக்கும் மலர்ங்குற கேரக்டருக்கும் நடக்குற உரையாடல்கள்ல கொஞ்சம் ஆபாசத்த குறைச்சிருக்கலாம். ஃபேமிலியோட போனவங்கள நிச்சயம் நெளிய வைக்கும்.

இவ்வளவு நல்ல பர்ஃபார்மன்ஸ்களுக்கிடையே பாபி சிம்ஹாவ பாக்க கொஞ்சம் மொக்கையா இருக்கு. அதுவும் வழவழ கொழகொழன்னு மண்வாசனை பாண்டியன் மாதிரி பேசுறாரு. அவரு கெட்டப் மாத்தி நடிச்சாதான் பாக்குற மாதிரி இருக்கும்போல. அவர் அவராவே நடிச்சா கொஞ்சம் கடினம் தான். கோ-2 பாத்தவங்களோட நிலமை எப்டி இருந்துருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. ஆனாலும் ரொம்ப மோசம்னுலாம் சொல்லிட முடியாது.

படத்துல இன்னொரு மொக்கையான விஷயம் பாடல்கள். சன் டிவிலயும் இசையருவிலயும் 500 தடவ போட்டதால “கண்ணப்பாத்து சிரிச்சா” ன்னு SJ சூர்யா ஆடுற பாட்டு கொஞ்சம் கேக்குற மாதிரி இருக்கு. மத்தபடி எல்லாம் மொக்கை. பாட்ட இன்னும் கொஞ்சம் நல்லா பன்னிருக்கலாம். BGM ஓகே.

கார்த்திக் சுப்பராஜ ரெண்டு விஷயத்துக்கு பாராட்டியாகனும். ஒண்ணு மூணு படங்களையுமே மூணு வெவ்வேறு Genre ல தெரிவு செய்து இயக்கியதுக்கு. இன்னொன்னு மூணு படங்களையுமே நல்ல தரமான படங்களா கொடுத்ததுக்கு. பீட்சா, ஜிகர்தண்டா படங்களைப் போலவே அவர் சொல்ல வந்த விஷயத்தை, தெளிவா எந்த காம்ப்ரமைஸும் பன்னிக்காம தரமான வகையில சொல்லிருக்காரு. விஜய்சேதுபதி கேரக்டரோட தன்மைய விளக்குறதுக்கு முதல்லயே ஒண்ணு ரெண்டு சீன் வச்சிருக்கலாம். இண்டர்வல் காட்சியைப் பாத்தப்புறம் தான், விஜய் சேதுபதி SJ. சூர்யாவுக்காக இதெல்லாம் பன்னுவாரான்னு தோணுது.

கொடுமை என்னன்னா படத்துல ஒரு தயாரிப்பாளர் கேரக்டர தப்பா காமிச்சிருக்காங்கன்னு ஒரு காரணத்த சொல்லி அதோட இன்னும் சில பழைய கதைகளை சேத்து விட்டு தயாரிப்பாளர்கள்லாம் சேந்து இவர் மேல ஆக்‌ஷன் எடுக்கப் போறாங்கலாம். ஏன்யா சினிமான்னா என்னன்னு தெளிவா தெரிஞ்சி அதுலயே ஊரிக்கிடக்குற நீங்களே, தப்பான ஒரு தயாரிப்பாளர் கேரக்டர படத்த வச்சிட்டான்னு ஆக்‌ஷன் எடுக்குறீங்கங்கும் போது “எங்க ஜாதிய பத்தி படத்துல தப்பா காமிச்சிருக்கீங்க படத்த தடை பன்னுங்கன்னு” ன்னு எதோ தமிழ்நாட்டோட கடைக்கோடில இருக்க ஒரு ஜாதி அமைப்பு உங்க படம் மேலயெல்லாம் கேஸ் போடுறதுல எந்த தப்பும் இல்லை. இது ”வெறும் சினிமா” ங்குறத முதல்ல சினிமாவுல இருக்க நீங்க உணருங்க. அப்புறம்தான் மத்தவங்க உணருவாங்க.


ஒரே மாதிரி கதைகள வச்சி பாலா எடுக்குற ஆகாவளிப் படங்களையெல்லாம் தூக்கி வைச்சி ஆடுற சிலருக்கு இந்தப் படம் ஏன் புடிக்கலைன்னு தெரியல.  என்னைப் பொறுத்த வரை இறைவி, கார்த்திக் சுப்பராஜோட மற்றொரு தரமான படைப்பு. கண்டிப்பா பாருங்க. நிச்சயம் ஒரு impact ah குடுக்கும்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...