Sunday, December 4, 2011

The Celestial Hunt -I - வரப்போகும் திரைப்படம்


Share/Bookmark
"அடப்பாவிகளா... இதுவரைக்கும் ரிலீஸ் ஆன படத்த தான் திருட்டு DVD la பாத்து
review எழுதி சாவடிசீங்க.. இப்ப வரப்போற படத்துக்கே review எழுத ஆரம்பிச்சிட்டீங்கன்னா வெளங்கிரும்" ன்னு சொல்ற உங்க மைண்டு வாய்ச நா கேட்ச் பண்ணிட்டேன். வெறிக்காதீங்க... u for mistake.. இது படத்த பத்தினது இல்ல. படமா வரக்கூடிய அளவு தகுதியுள்ள ஒரு ஆங்கில நாவல் பற்றியது.

ச்ச... எப்புடியெல்லாம் திங்க் பண்றானுங்கன்னு சில ஹாலிவுட் படங்கள பாத்து ஆச்சர்யபட்டு இருக்கேன். ஆனா இந்த நாவல படிச்சப்புறம் எப்புடி இவரால இப்புடி யோசிக்க முடிஞ்சிதுன்னு யோசிக்கவே எனக்கு ரெண்டு நாள் ஆச்சு. அப்புடி ஒரு தாக்கத்த ஏற்படுத்துச்சி இந்த நாவல்.

இந்த நாவல ஒரு நாளுக்கு ஒண்ணு இல்லன்னா ரெண்டு Chapter ah படிச்சிக்கலாம்னு நெனச்சி தான் இத வாங்குனேன்.. ஆனா ஒரே நாள்ல படிச்சி முடிக்கிற மாதிரி இந்த நாவல்ல எதோ பில்லி சூன்யம் வச்சிருக்காங்க. எடுத்தப்புறம் கீழ வைக்க முடியல. சின்ன வயசுலர்ந்தே எனக்கு இந்த மாதிரி mystery, thriller கதைங்க மேல ஒரு ஈர்ப்பு. யாரோட சின்ன வயசுலருந்துன்னு கேக்காதீங்க.. என்னோட சின்ன வயசுலருந்து தான்.

பல தனித்தனி களங்களில் நடக்குற கதைகள் கடைசியா ஒரு பொதுவான அச்சில் பிணைக்கப்பட்டு  இருக்கு. இது வழக்கமான நாவல் பாணிதான்னாலும் ஆரம்பத்துல நமக்கு ஆர்வத்தை ஏற்படுத்துற பல முடிச்சுகளை போட்டு கடைசில எந்த லாஜிக் குளறுபடியும் இல்லாம  அவிழ்த்துருக்காரு (அடுத்த பகுதிக்கான சில முடிச்சுகளையும் போட்டு) எழுத்தாளர் R.தேவி குமார் . த்ரில்லர் கதை ரசிகர்களை இது கண்டிப்பா ரொம்ப பிடிக்கும்.

இப்போதைய கால கட்டத்தில் கதையை ஆரம்பிச்சி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நம்மை அழைச்சிக்கிட்டு போறாங்க. நாம கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத ஒரு உலகத்தில் பயணம் செய்த ஒரு அனுபவம். எழுத்து நடையில் நாம அந்த கதைக்களத்துலயே இருக்குற மாதிரி ஒரு எஃபெக்ட் இருக்கு. ஒரு வேள இந்த கதையில வர்ற அனில் மாதிரி தேவிகுமாரும் வீட்டுல ஒரு time machine ah செஞ்சி பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி என்ன நடந்துச்சின்னு பாத்துட்டு வந்தாலும் வந்துருப்பரோன்னு தோணுது. அந்த அளவு கதையில் நுணுக்கம் தெரியுது.

இன்னொரு முக்கியமான விஷயம் இந்த நாவல பத்தி சொல்லலும். Time machine  working பத்தின இவ்ளோ technical data வேற எங்கயும் நாம பாக்க முடியாது. எழுத்தாளரோட பல  வருட உழைப்பு இதுல தெரியுது. கண்டிப்பா இந்த நாவல் விரைவில் நாம திரையில பாக்குற வாய்ப்பு வந்தாலும் வரலாம்.இது தான் அவரோட முதல் நாவல்னு நெனைக்கிறேன். இந்த நாவலின் அடுத்த பகுதிக்காக அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன்.

கதையில் வரும் காதாபாத்திரங்களோட பேரு எல்லாமே ஒரே வரிசையில இருக்குறதால (anil, arun, rajesh, ram) சில இடங்களில் படிக்கும் போது சின்ன கன்பீசன் ஆயிடுது. இன்னும் இந்த பெயரெல்லாம் நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட பெயரா இருக்கு.Main characters ku கொஞ்சம் unique names குடுத்துருந்தா நல்லா இருந்துருக்கும்

 இந்த நாவலில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கதை நடப்பதை போல் (அதாவது காட்சிகளாக) எழுதியிருந்தால் இன்னும் ரொம்ப நல்ல இருந்துருக்கும்.
வேற எதுவும் மைனஸ் இருக்கதா எனக்கு தெரியல.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.

இந்த நாவல் flipkart.com ல கெடைக்குது. லிங்க் இதோ


http://www.flipkart.com/books/8190796720?pid=gw23f9n1cr&_l=qZBl8t+jD61L+lgB7L9uGw--&_r=8KYKCXr4dONlGvxxil6Uwg--&ref=64f681d2-ec4d-400f-a1ba-59ea3eb39694



ஆசிரியர் குறிப்பு:

"The Celestial Hunt" ஒரு சாதாரண நாவலா மட்டும் இல்லாம, பல ஆறிவியல் சம்பந்தமான நுனுக்கங்களும் அடங்கியிருந்துச்சி. அப்போ தான் இந்த புத்தகத்தோட author ah பத்தி தெரிஞ்சிக்கலான்னு இணையத்துல தேடிய போது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைச்சிது. அத இப்போ உங்களோட பகிர்ந்துகிறேன்.

சில வருடங்களுக்கு முன்னாடி ஒரு பொறியியற் கல்லூரில 1st year பசங்க தங்கியிருந்த விடுதி.

ரூம் நம்பர் 208 ல ஒரு நாலு பசங்க தங்கியிருந்துருக்காங்க. கொஞ்சம் மக்கு பசங்கதான் போலருக்கு. அவங்களுக்கு பக்கத்து ரூம்ல (209) ரெண்டு மூணு பேர் தங்கியிருந்துருக்காங்க இந்த ரெண்டு ரூம் பசங்களுக்கும் அதிக பழக்கம் இல்லை போலருக்கு.

ஒரு மாசம் கழிச்சி காலேஜ்ல 1st cycle test வச்சி பேப்பர் குடுத்துருப்பாங்க போல. ரூம் 208 உள்ள பசங்க எல்லாரும் பாஸ் ஆயிட்டானுங்க. அம்துக்கு 35, 30 ன்னு மார்க் எடுத்து பாஸ் ஆயிருப்பானுங்க போல. எல்லாருக்கும் ரொம்ம சந்தோஷம். அப்போ ரூம் 209 க்கு வெளியே ஒரு பையன் இன்னொரு பையன்ட ரொம்ப feel பண்ணி சொல்லிகிட்டு இருந்துருக்கான்.

"ச்ச... maths la மார்க் கொறைஞ்சிருச்சிடா... அசிங்கமா இருக்கு.. 1st test laye இப்புடி
ஆச்சின்னா மிஸ்ஸுக்கு என் மேல impression eh போயிடும்டா" ன்னு ரொம்ப feel
பண்ணி சொல்லிகிட்டு இருந்துருக்கான். இத பாத்த 208 பசங்க அய்யோ பாவம் ஃபெயில் ஆயிட்டான் போல... கொஞ்சம் ஆறுதல் சொல்லி மனச தேத்தி விடலாம்னு நெனச்சி அவன் பக்கத்துல போயி...

"விடு மச்சி... 1st test தான... freeya vidu... அடுத்த டெஸ்ட்ல பாத்துக்கலாம்... இதுக்கெல்லாமா feel பண்றது"ன்னு ஆறுதல் சொல்லிருக்கானுங்க...

அதுக்கு அந்த பையன் "இல்லடா... எனக்கு இதுமாதிரி மார்க் கொறைஞ்சதே இல்லடா... இதான் 1st time... ரொம்ப கஷ்டமா இருக்குடா" ன்னுருக்கான்....

"சரி விடு மாப்ள.. பாத்துக்கலாம்.. இது என்ன செமஸ்டரா... சைக்கிள் டெஸ்ட் தானே... ஆமா உனக்கு எத்தன மார்க்ல போனிச்சி?" ன்னு கேட்டுருக்கானுக...

அதுக்கு அந்த 209 பையன் " ஒரு மார்க் போயிருச்சிடா... ஐம்பதுக்கு நாப்பதி ஒன்பது தான் எடுத்துருக்கேன் (49/50)... மிஸ்ஸுக்கு என் மேல impression eh போயிடும் டா" ன்னு  சொல்லிருக்கான்.

இத கேட்டதும் அந்த பசங்க எதும் பதில் சொல்லாம slow motion la reverse gear ah
போட்டுகிட்டு எஸ்கேப் ஆயிட்டனுங்கலாம்.அப்புறம் அந்த பையன பத்தி
விசாரிச்சி பாத்தப்பதான் தெரிஞ்சிருக்கு அந்த பையன் தான் 10th matriculation exam la
state first ன்னு. அதுக்கப்புறம் அவனுங்க அந்த பையன்க்கிட்ட நாலு வருஷமும் மார்க்  என்னனு கேட்டதே இல்லையாம்.

அந்த பையன் வேற யாரும் இல்ல. இந்த நாவலோல writer R.தேவிகுமார் தான். அப்புறம் தான் தெரிஞ்சிது இந்த நாவல்ல ஏன் இவ்ளோ டீடெய்ல்ஸ் இருக்குன்னு. இதுக்காதா பின்னே.... இந்த நாவலோட அட்டைப்படமே பார்த்தோன நம்க்கு புடிக்கிற மாதிரி இருக்கும்.இத டிசன் பண்ணவரு தேவிகுமாரோட கல்லூரி நண்பர் பாலவிக்னேஷாம். அவர் கல்லூரில ப்ரோஜெக்ட் இல்லாத மக்கு பசங்க சில பேருக்கு அவரோட ப்ராஜெக்ட குடுத்து உதவி பண்ணிருக்காருன்னு வரலாறு சொல்லுது.


என்ன கேட்டீங்க.. அந்த 208 ரூம் பசங்களா? அட அவனுங்கள விடுங்க... எங்கயாவது. மொக்கையா எதாவது blog எழுதிகிட்டு இருப்பானுங்க....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...